|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 2:53 PM

<>32ல் நான்

என்னையும் இந்த 32 கேள்விகள் வலைக்குள் மாட்டி விட்ட சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!! இதோ........



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னுடைய பெயர் 'ஷஃபி', இது எனது தாத்தா எனக்கு வைத்த பெயராம்.


அப்புறம் 'ஷஃபிக்ஸ்' எப்படி? பள்ளி நாட்களில் ஆங்கில‌ ஆசிரியர் திரு. பிரான்சிஸ் அவர்கள் வகுப்பில் ஒரு நாள் suffix & prefix நடத்தினார், அந்த நாள் முதல் நன்பர்கள் suffixயே எனக்கும் வைத்து அழைத்த‌னர். அது தற்பொழுது வலைப்பதிவு பெயராகி விட்டது.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?


இய‌ற்கையின் சீற்றத்தின் இன்னல்களுக்கிடையே மனிதர்கள் மடிவது ஒரு புறம், மனிதனும் தன் பங்குக்கு மதம், இனம், நாடு எனும் ஆண‌வ‌த்தால், தவறேதும் செய்யாது தன் சக மனிதர்களை தண்டிக்கும் இழிச்செயல் ம‌றுபுற‌ம். இதனைக் கண்டு மனம் பல முறை அழுவதுண்டு.



3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?


பிடிக்கும். பள்ளி நாட்களில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளை கரும்பலகைகளில் ஆசிரியர்கள் என்னை எழுதச் சொலவார்கள். அதனைப் பின் தொடர்ந்து வகுப்பில் உள்ளவர்கள் எழுதுவர், அதனால் மற்றவர்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கின்றேன்.


4.பிடித்த மதிய உணவு என்ன?


சைவம் : தக்காளி குழம்பு + கீரை பொறிய‌ல்


அசைவம் : மீன் குழம்பு + வறுவ‌ல்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?


உடன்? கொஞ்சம் யோசிச்சு, அதுக்கு அப்புறம் தான்!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?


ஆறு!! எங்களூரில் இர‌ண்டு ஆறுகளிலும் பள்ளி நாட்களில் அடிக்கடி குளிப்பது உண்டு. தற்போது நீச்சல் குளம் தான், என்ன செய்ய குளோரின் அருந்தி குளிக்க வேண்டியதன் கட்டாயம்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


உடை!! விலை உயர்ந்த ஆடையாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை, எளிமையிலும் முழுமையான உணர்வை தர முடியும். ஒரு ஆளோட ரசனை அவருடைய ஆடைகளில் ஓரளவு வெளிப்படும்னு நினைக்கின்றேன்.


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


பிடித்த விஷயம் : எதையும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என திட்டமிட்டு செய்வது, பல நேரங்களில் அப்படியே நடந்து விடுவதும் உண்டு, அதில் ஒரு மகிழ்வு இருக்கத்தான் செய்கிறது.


பிடிக்காத விஷயம் : அப்படி நடக்காவிடில் அப்செட் ஆகி, ஏதாவது காரணம் கண்டுபிடிச்சு அதுக்கப்புறம் தான் அப்பாடான்னு ஒரு திருப்தி ஆவது (சில சமயம் நம்மள நாமளே ஏமாத்திக்குறோமோன்னு தோணும், ஆனால் மனதிற்க்கு ஒரு நிறைவு, அது ரொம்ப முக்கியம்னு கருதுகிறேன்)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?


பிடித்த விஷயம் : பொறுமை


பிடிக்காத விஷயம்: அந்தப் பொறுமையை வெல்ல முயலும் எந்த முயற்சியும்


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?


எனது பள்ளித்தோழர்கள் அனைவரையும். சிலரை சந்தித்தாலும், ஒரே இடத்தில் வைத்து அனைவரையும் சந்திக்க வேண்டுமென ஆசை.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?


ஆலிவ் பச்சை நிற முழுக்கை சட்டை, சாம்பல் நிற கால் சட்டை


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?


பார்ப்பது : அலுவலகத்தில் மேசை மேலிருக்கும் அழகான சிறிய செடி.


கேட்பது: அலுவலகத்தில்......அரபி, மளையாலம், ஹிந்தி என பல மொழிகள் காதில் விழுகிறது, அதனிடையே எனது தட்டச்சு சத்தம்.


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?


மெட்டாலிக் கருப்பு நிறம் அதில் பளிச்சுடும் வெள்ளை கற்கள் பதித்து இருந்தால் ராயலோ ராயல்!!


14.பிடித்த மணம் ?


மலர்களில் லேவன்டர், இலைகளில் மின்ட், வாசனைத் திரவியங்களில் ஜோவன் மஸ்க்!!



15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


டூ லேட்!! என்னுடைய பதிவுலக நன்பர்கள் அனைவரும் இந்த 32 மழையில் ஏற்க்கனவே நனைந்தவர்கள்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?


சகோதரி சுமஜ்லா, இவருடைய எந்தப்பதிவானாலும், அவருடைய கடின உழைப்பு, எதைப்பற்றியும் அலசி ஆராயும் தன்னம்பிக்கை, கற்க்கவும் கற்றுக்கொடுக்க்வும் அவர் காட்டும் ஆர்வம், நகைச்சுவை உணர்வு, அனைத்தும் வெளிப்படும்


17.பிடித்த விளையாட்டு?


பாட் மின்ட்டன் மற்றும் நீச்சல், தற்பொழுது நீச்சல் மட்டுமே. கிரிக்கெட் ஒரு நாள் ஆட்டம் மட்டும் காணப்பிடிக்கும்


18.கண்ணாடி அணிபவரா?


ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அணியத்தொடங்கியது இன்னும் தொடர்கிறது.


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


திரைப்படம் என்பது ஒரு நல்ல பொழுது போக்காக இருக்க வேண்டும். வன்முறைகளாலும், தேவையற்ற காட்சிகளாலும் சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு சாதனமாக மாறி வருகிறது. சினிமா தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் சற்று சிந்தித்தால் நலம்.


20.கடைசியாகப் பார்த்த படம்?


பள்ளி, கல்லூரி நாடகளில் உள்ள ஆர்வம், நேரம் இப்போது இல்லை, சில நேரங்களில் நைல் சேட்டில் வைத்து ரிமோட்டை அழுத்தி விளையாடும்போது TWO WEEKS NOTICE காணும் வாய்ப்பு கிடைத்தது. பழைய படந்தான் ஆனால் நல்ல ரொமான்டிக் படம்.


21.பிடித்த பருவ காலம் எது?


மழைக்காலம். அதுவும் மழைக்கு முன் தவழும் சில்லென்ற காற்று, ஒரு இன்பச்சிலிர்ப்பு.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?


நிறைய படிப்பதுண்டு, இது தான் என்று சொல்லத்தெரியவில்லை. நெட்டில் நிறைய மேய்வதுண்டு. எது படித்தாலும் அதில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவன்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


அலுவலகத்தில் : எப்பொழுதும் அதே வின்டோஸ் ஸ்டேன்டர்ட் படம். வீட்டில் : மகனுக்காக‌ அவனுக்கு பிடித்தவற்றை தேடி அடிக்கடி மாற்றுவதுண்டு.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?


பிடித்த சத்தம் : அமைதியான தோட்டம், பறவைகளின் விதவிதமான சத்தங்கள், அருகில் ஒரு நீரோடையும் இருந்தால் இன்பம் அலாதிதான்


பிடிக்காத சத்தம் : மனதை புண்படுத்தும் பேச்சு சத்தம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


மலேசியா, தற்பொழுது சவூதி அரேபியா


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


அப்படி இருப்பதாக எதுவும் தெரியவில்லை, பல நேரங்களில் பல பேர் பலதும் சொல்வதுண்டு! அது அவரவர் பார்வைகளில்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


நம்பிக்கை துரோகம்


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


சில நேரங்களில் நாம் நினைத்தது நடந்தே ஆக‌ வேண்டும் என் எதிர்ப்பார்ப்பது.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


ஊட்டி


30.எப்படி இருக்கணும்னு ஆசை?


வீட்டின் மகிழ்வே, நாட்டின் மகிழ்வு. அதனால் வீட்டிற்க்கு உபயோகமுள்ள ஒரு ஜீவனாக இருக்க வேண்டும். எனது நட்புக்களுக்கு நல்ல நன்பனாகவும் இருக்க வேண்டும்.


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?


சமையல்!! மனைவியடம், நீ போய் உட்காரு, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லி சமையல் செய்வதில் ஒரு ஆனந்தம் (எப்பவாவது ஒரு தடவை இப்படி ஒரு அட்வென்ட்ச்சர் அட்டெம்ப்ட் செய்வதுண்டு)


32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?


வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!

Posted on 5:17 PM

<>எண்ண அலைகள்

Filed Under () By SUFFIX at 5:17 PM

மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!

கோடி வீடு
குழந்தைகள் குதூகலம்.
கூரையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!

கையில் கணிணி
கை நிறைய காசு
கற்றான் என்னவோ?
சுற்றுகிறான் ஊரெங்கும்!
கண்பட்டு பயனென்ன‌?
கல்லாதது என் குறை தான்!

கால்களை நான்‌ வ‌ருத்தி,
கடத்தியது போதுமடா,
காலமெல்லாம் தெருக்கடையில்
திகட்டியது என் வாழ்க்கை!

ப‌டித்தேன் ப‌ட்ட‌மெல்லாம்
ப‌ற‌ந்தேன் ஊரெல்லாம்,
உற‌வுகளை பார்ப்ப‌தோ
வ‌ருடமொரு முறை தான்!

ப‌ட்டாடை ப‌ல்லாயிர‌ம்
ப‌ல்லிளித்தாய் ப‌க‌ட்டைக்க‌ண்டு!
பாலாடைக்காணா ப‌சிவ‌யிறு,
பார்க்க‌ ம‌ற‌ந்த‌தேன்
ப‌க்க‌த்து வீட்டில்!

ப‌ழ‌குவ‌த‌ற்க்குள் பெற்ற‌ இன்பம்,
ப‌ழ‌ங்க‌தையாய் ஆக்கி வைத்தாய்,
தொலை நோக்கென வாதித்து
தொலைத்தாய் தொடங்கியதை!

எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள்
ஓடுது பார் அங்குமிங்கும்,
இருக்கும் அடுத்தோரை
ஆராய்வதை நிறுத்திவிடு!

களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!




அன்பு நன்பர் நட்புடன் ஜமால் எனை ஊக்கப்படுத்தி மகிழ்வித்த இந்த விருது!! சம்பிரதாயப்படி இந்த விருதை நம் பதிவுலக‌ நன்பர்களுக்கு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாம், விருது கொடுக்கும் தகுதி இந்தப்புதிய பதிவாலனுக்கு சுமத்தப்பட்ட சுகமான‌ சுமை தான். இங்கு பழம்பெரும் மூத்த பதிவாலர்களுக்கு இந்த விருதை அளிப்பதில் பெருமைப்படுகின்றேன்.

இவரது எழுத்துக்களில் அவருடைய ஆழமான் உழைப்பும், அது பற்றிய நுண்ணறிவும் இருக்கும், Teaching Skills இவரிடம் நிறையவே இருக்கிறது. சமீபத்தில் வலைப்பூ சம்பந்தமான தொழில் நுட்பக்கூறுகளை பதிவாக போட்டு புரட்சி செய்துவரும் சுமஜ்லா.


இவருடைய கவிதைகளில் சமுதாயப்புரட்சியும், ஆதங்கமும் சீறி எழும், அதற்க்கு சாட்சி சமீபத்திய அவருடைய படைப்பு 'சீதைகளை சிதையில் ஏற்றாதீர்'.... அவரே தான் சக்தி


கவிதைக்கு ஒர் அரசி, தனது ஓசையையே கவிதையாக்கி மகிழ்த்திடுவார், இவருடைய கவிதைகளின் ரசிகர் பட்டாளத்தில் நானும் ஒருவன், இவர் தான் எங்கள் தமிழரசி.


அவர் கவிதைக்கு அரசியென்றால் இவர் சமையற்கலையில் அரசி, அது மட்டுமல்லாது வீட்டு பராமரிப்பு குறிப்புகளை மிகச்சிரத்தையுடன் பகிர்ந்து வருகிறார். இவர்தான் ஜலீலா


அழகிய சிறு கவிதைகளை படைத்து வருபவர். என்னுடைய ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் இவரும் ஒருவர். இவருடைய கவிதை 'சுவாசம்', நான் படித்து ரசித்தவற்றில் ஒன்று. இவர்தான் ரோஸ்.

சமீபத்தில் இவருடைய சிறு கவிதைகளை படித்தேன். மிகவும் எதார்த்தமாக இருக்கும் இவர் கவி வரிகள். இவருடைய ஆக்கங்கள் "ஏக்கம்" மற்றும் "வெட்கம்", சிறிய வரிகளானாலும், ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள் காயத்ரி!!

நன்றி நன்பர்களே!!


Posted on 12:53 PM

<>மகிழ்வித்த ஜமால்

Filed Under () By SUFFIX at 12:53 PM

மகிழ்ச்சி மழை எனது தோட்டத்தில், ஆம் இந்த வாரம் ந‌ன்பர் நட்புடன் ஜமால் ஜொலிக்க வைத்த வைரக்கிரீடம், சென்ற வாரம் எங்கள் வலைப்பூ அக்கா தமிழ் அரசி வலைச்சரத்தில் வழங்கிய தங்கப்பதக்கம்!!
**நன்றிகள் என் அன்பு நெஞ்சங்களுக்கு**
முகம் தெரியா முல்லை பூக்கள், நட்பு மட்டும் நன்றாய் தெரிந்த நட்பூக்கள், வந்தேன் விருந்தாளியாகத்தான், சொந்தமாக்கி கொண்டாடிய தங்க நெஞ்சங்கள்!! இப்படி அடுக்கிக்கொன்டே போகலாம் ஆலமரமாய் வளர்ந்து வரும் நம் நட்பை!
வாழ்க நன்பர்களே!! வளர்க நட்புடையோர்களே!!


"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா" இப்ப‌டி ப‌ல‌பேர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம். சொல்வது யாராகவோ இருக்கட்டும், இதில் நமது பொறுப்பு என்னவென்பதை ப‌‌ற்றி இங்கே கொஞ்ச‌ம் புரிஞ்சுக்க‌லாமா? சமீபத்தில் Communication பற்றி படிக்கும்பபோது கிடைத்தவற்றை உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு தோன்றியது.

வீட்டிலும் அலுவலகத்திலும் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரனமும் இது தான்.

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்.

"உங்க‌ கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்ன‌ய்ய‌ சொல்ல‌னும் - இப்ப‌டி இடித்துரைக்கும் இல்ல‌த்த‌ர‌சி.
"என்னடா இப்படி ஒரு சில்லியான கேள்வி"ன்னு ஆச்சர்யப்படுத்தும் அப்பாக்கள்

இவுக எல்லோரும் இத கொஞ்சம் ஆழமா மேஞ்சுட்டு போங்க‌. Effective Communication க்கு சில‌ காரணிகள்:

1. கவனித்துக் கேட்டல் (Listen)

பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,க‌வனமா கேட்கனுமாம். "நீ ரொம்ப அப்ஸெட் ஆயிருக்கேன்னு எனக்கு நல்லா புரியுது, நீ என்ன சொல்ரேன்னும் எனக்கு புரியுது" இது மாதிரி சொல்வதன் மூலம் நீங்கள் கவனமாக கேட்கிறிர்கள் என்பது அவர்களுக்கு புரியும்.

2. மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல் (Empathy)

"டேய் மச்சான் இன்னக்கி மேனேஜர் பயங்கரமா ஏறிட்டார்டா, ரிப்போர்ட் கொடுக்க ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான், அதுக்கு போய்...." இப்படி ஒரு நனபர் வந்தார்னா, "அட போடா இதே ரோதனையா போச்சு நீயும், உன்னோட மேனேஜரும், நானா இருந்தா அப்பவே அந்தாள எட்டி உதைச்சுட்டு, வேற வேளைய பார்த்துட்டு போய் இருப்பே"ன்னு நீங்க சொன்னா சத்தியமா நீங்க மாறித்தான் ஆக வேண்டும்.

3. பொறுப்பேற்றல் (Be Responsible)

"சரி என்கிட்டே சொல்லிட்டியல்ல, நாம ரென்டு பேரும் நல்லா டிஸ்கஷன் பன்னுவோம், ஒன்னும் கவலைப்படாதே"...இப்படி ஒரு ஆருதல் கிடைத்தால் நிச்சயமா மற்றவர் சந்தோஷப்படுவார். அதை விட்டுட்டு "அச்ச்சோ... ரொம்ப சாரிப்பா" அத்தோட ஆளு எஸ்ஸ்ஸ்ஸ்ஸானா எப்படி இருக்கும்.

4. அட‌க்கம் அல்லது பணிவு (Be humble)

"இந்த மேட்டரெல்லாம் எனக்கு ஜுஜுபி" இது மாதிரி மேதாவித்தனத்தை கொஞ்சம் சுருட்டி வச்சுட்டு. உங்க LKG படிக்கர பொன்னு "அப்பா இன்னக்கி டீச்சர் என்னோட நோட்ல 5 ஸ்டார் போட்டாங்கப்பா"ன்னு சொன்னா நீங்க அவங்க லெவலுக்கு இறங்கி அதே குதூகலத்துடன் "அம்மாடியோவ் 5 ஸ்டார்,சூப்ப்ர்டா என் சமத்து"ன்னு உற்சாகப்படுத்த வேண்டும். அத விட்டுட்டு "சரி சரி, அது இருக்கட்டும் நாளைக்கு உள்ள ஹோம் வொர்க்கை போய் செய்"னு சொன்னால், அப்பாவை..அடப்பாவின்னு சொல்லத்தோனும்.

5. வார்த்தைகளை சிந்துமுன் சிந்தித்தல் (Be Thoughtful)

எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, அவர் எது சொன்னாலும், "ஆமாம் அப்படித்தான்", "கரெக்ட்", "அவன விடக்கூடாது", அவரோடு சேர்ந்து நீங்களும் வசைமாரிப் பொழிய வேண்டாம். அவரை கொஞசம் அமைதிப்படுத்த முயற்சித்து, நீங்கள அதிகமாக பேசாமல், அவர் பேசுவதை கேட்டு, ப்ள்ஸ், மைனஸ் பாயின்ட்களை புரியவைத்து அப்புறம் என்ன செய்யலாம்னு தீர்மானிக்கலாம்.

ஒரு ரிப்பீட்டு:
*Listen* *Empathy* *Be Responsible* *Be Humble* *Thoughtful*


சந்தேகப்பேர்வழி Mr.Doubt என்ன கேட்கிரார்னா "இது எல்லாம் சொல்லித்தொலைச்சாத்தானே கரெக்ட்டா வொர்க் அவுட் ஆவும், எங்க வூட்டுக்காரவுக‌ இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.




என்னை ஒரு வலைப்பதிவாளனாக மதித்து அழகிய முறையில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசியாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை இந்த அழ‌கிய‌ பூந்தோட்ட‌த்திற்க்கு அழைத்து வ‌ந்து‌ உங்க‌ள் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்திய‌ நவாஸிர்க்கு ந‌ன்றிக‌ள் பல‌. அடுத்து கிடைத்த‌ அற்ப்புத‌ ஜாம்ப‌வான்க‌ள் ஜ‌மாலும் அபூஅஃப்ச‌ரும், இவ‌ர்க‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள்.

என‌து ஆக்க‌க‌ங்க‌ளுக்கு த‌வ‌றாம‌ல் பின்னூட்ட‌மிட‌ம் செய்யது, ரோஸ், சும‌ஜ்லா, ஜ‌லீலா, அக்பர், சர்ஃப்ராஸ், முகேஷ் ம‌ற்றும் புதிய‌ ந‌ன்ப‌ர்க‌ள் ச‌க்தி, ர‌ம்யா, வ‌சந்த், தேவ‌ன்மய‌ம், ந‌சரேய‌ன், மயாதி, சுரேஷ் அனைவ‌ருக்கும் ம‌ன‌மார்ந்த ந‌ன்றிக‌ள்.

இன்னும் சிற‌ந்த‌‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் உங்க‌ள் அனைவ‌ரின் ஆத‌ர‌வை நாடும் உங்க‌ள் அன்பு ந‌ன்ப‌ன் "ஷ‌ஃபி".

Posted on 10:02 PM

<>இப்படிக்கு கவிதை

Filed Under () By SUFFIX at 10:02 PM



நறுக்கினார் போல் நாலே வரிகள்
நான்காயிரம் மொழிப்பெயர்ப்பு
நானூறு பொழிப்புரைப்பு
விவ‌ர‌மானோர் விவாதிக்க,
அற்றோரோ ஆமோதித்தர்!

கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்
வார்த்தை விளையாட்டாய்
விளையாடியது அவர் நாவால்

எதுகை மோனையாய் எடுத்துரைத்து
இசையோடு இழைத்து எனை
இனிதே இன்புற்றார்
பார்த்த‌லும், கேட்ட‌லும், ப‌கிர்த‌லும்
நாள் முழுதும் அவருட‌ன் நான்

மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்

அடுக்கடுக்காய் ஆயிர‌ம்பொய்
அத்தனையும் கவிதைத்தானாம்

க‌ய‌ல் விழிகளிரன்டை
க‌ளவாடினார் எனை வைத்து
காத‌ல் ம‌ழை பெயச்செய்தார்
க‌ருங்கூந்த‌ல் கார்மேக‌மாம்

சிதைத்தார் செவ்வித‌ழை
செந்தேனது,
புல‌வ‌ன் நானென்றார்
செம்மேனியாள் செய‌லிழந்தாள்
அங்கேயும் நானிருந்தேன்

காதலோ காமமோ
காத்திருப்பேன் க‌விதையாய்
கனக்கிலடங்கா கனா உனக்கு,
கட்டவிழ் நானி நிற்ப்பேன்

ந‌ங்கூர‌மாய் ந‌ம் ந‌ட்பு,
இருத்திவிடு
இரும்புச்ச‌ங்கிலியாய் எனை இனைத்து

வீரமும் தீரமும்
வெகுன்டெழட்டும் வைர வரிகளாய்
தடைகளை தகர்த்தெறி
எரிக்கட்டும் உன் எழுத்துக்கள்

...இப்ப‌டிக்கு க‌விதை



Posted on 3:33 PM

<>வெட்க்கிய காதல்

Filed Under () By SUFFIX at 3:33 PM


"காதல் மழைக்காக ஒதுங்கியவர்கள்
அக்னியாய் பார்வைகள் அனலாய் வீச
தடைகளை குடையேந்தி தகர்தெரிந்தவர்கள்"
பேசுவேனா வீரவசனம் ?

விரசமும், சரசமும் வெட்டவெளியில்
வெட்க்கித்தலை குனிகிரேன் மனம் வெதும்பி

வீதியில் விளம்பரம்..
விரகம்தான் விடயமோ
புனிதமான காதல் புடலங்காயோ
காசு கொடுத்தால் கிடைக்க கத்தரிக்காயோ
சுதந்திரமென சுலபமாய் சொல்வீர்கள்
சீரழிக்கும் சுதந்திரம் சுலபமாய் வந்தாலும்
அருவெறுப்பாய் இருக்கிறது, அறவே வேண்டாம்!!!

அண்ணே...பார்த்து எடுங்க‌

ஃபோக்கஸ் பன்ன வேண்டியது தான், இது ஓவரிலும் ஓவர்



இவர் நிச்சயமா கபடி பிளேயராத்தான் இருப்பாரு


இவரு படம் பிடிக்கிராரோ இல்லையோ, இவரோட லோ ஹிப் அனைவரின் கேமராவயும் கவரும்



இந்த குரூப்போட அல்டிமேட் ஸ்டார் இவருதானுங்க,.. சொல்லத்தேவையில்லை!!