|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 4:05 PM

தேன்'நீ'

Filed Under () By SUFFIX at 4:05 PM


கழுகுப் பார்வை

முட்டி மோதியது
திட்டமிட்டே வட்டமிட்டது
வண்டின் கொடிய‌ அம்புகள்!!

காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!

அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!

வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!

பெயர்ந்தது பொழுதும்
குனிந்தது மலரும்
கணிந்தது பார்வை
வண்டது வென்றது
களிப்பினில் குளித்தது

மோக மேகம்
திரண்டது திரளாய்,
கணமழையில் இன்பம்
தேனாய் நனைந்த‌து!!

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)

56 comments

gayathri on December 20, 2009 at 4:17 PM  

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)

anegama enaku anai ittavangalathan riukumnu nenaikiren


gayathri on December 20, 2009 at 4:19 PM  

ada anna kavithai fulla ore romancesa iruku so

nalla irukunu mattum sollitu podren


பா.ராஜாராம் on December 20, 2009 at 4:20 PM  

என்னையும் என்ன?

நீங்கள் எழுதாவிட்டால் யார் எழுதுவது..

எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு!


S.A. நவாஸுதீன் on December 20, 2009 at 4:21 PM  

நீங்க அசத்துங்க ஷஃபி.


S.A. நவாஸுதீன் on December 20, 2009 at 4:22 PM  

///காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!///

வேற வழி. சரண்டர் ஆகித்தானே ஆகனும்


S.A. நவாஸுதீன் on December 20, 2009 at 4:24 PM  

ரொம்ப நல்லா இருக்கு ஷஃபி.


தமிழ் அமுதன் on December 20, 2009 at 4:53 PM  

//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)


goma on December 20, 2009 at 5:06 PM  

அழகின் செருக்கில் மலரின் சிரிப்பு ஆதவன் ஒளியில்மின்னலாய் மிளிர்ந்தது!!

அடடா மலரின் சிரிப்புக்கு ஆதவனை லைட்பாய் ஆக்கிய விதம் அருமை


நிஜமா நல்லவன் on December 20, 2009 at 5:13 PM  

அட அசத்தல் கவிதை!


நிஜமா நல்லவன் on December 20, 2009 at 5:15 PM  

/ஜீவன் said...

//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


நட்புடன் ஜமால் on December 20, 2009 at 6:24 PM  

தலைப்பிலேயே வார்த்தை விளையாட்டு.

படம் அழகு

வரிகளுக்கு என்ன அவையும் அழகே :)


நட்புடன் ஜமால் on December 20, 2009 at 6:24 PM  

வெதும்பிய வண்டுவதங்கா ஆசை துவலா வேட்கை தணியா விருப்பம்!!

என்னமோ போங்க ஷஃபி ...


ஜெஸ்வந்தி - Jeswanthy on December 20, 2009 at 6:38 PM  

//ஜீவன் said...

அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)//

அதே! அதே!


இராகவன் நைஜிரியா on December 20, 2009 at 7:20 PM  

சூப்பர் கவிதை.

எழுது தம்பி எழுது. நீ எழுதாம வேற யார் கவிதை எழுத முடியும்.


Chitra on December 20, 2009 at 7:39 PM  

காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!.......................கவிதை எழுத ஆணையிட்டது யாரை இருந்தாலும், நன்றி. நல்ல கவிதை எங்களுக்கு கிடைத்தது.


அப்துல்மாலிக் on December 20, 2009 at 8:55 PM  

ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க‌

எங்கேயா இருந்தீங்க இம்பூட்டு திறமைய வெச்சிக்கிட்டு

ஷ‌ஃபி ரசித்தேன் முழு கவிதை வரிகளையும்


அப்துல்மாலிக் on December 20, 2009 at 8:55 PM  

//காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!
//

class thala


அப்துல்மாலிக் on December 20, 2009 at 8:56 PM  

//டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)//

ஏதாவது புதுசா?????


பூங்குன்றன்.வே on December 20, 2009 at 9:33 PM  

/வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//

வார்த்தைகள் உங்களிடம் சிக்கி திணறி(சந்தோஷத்தில்) பிறந்திருக்கின்றன நல்ல குழந்தையாய்-கவிதையாய்!! வாழ்த்துக்கள் ஷ‌ஃபி !!!


Annam on December 21, 2009 at 7:18 AM  

sooperuuu kavithai sooperu


Annam on December 21, 2009 at 7:20 AM  

டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)
/////////////////

intha kolaverikku kaaranam yaaro athu yaaro:)


அ.மு.செய்யது on December 21, 2009 at 7:37 AM  

ச‌ங்க‌ கால‌ க‌விதை மாதிரி இருக்கு.....ஒரு வேள‌ அப்ப‌டியிருக்குமோ !!! ஒரு வேள‌ இப்ப‌டியிருக்குமோ ?!?!?!?!


ஹுஸைனம்மா on December 21, 2009 at 9:18 AM  

இங்கயும் கவிதையா? இன்னிக்கு என்னவோ நாள் சரியில்லை போல, போற பிளாக்கிலெல்லாம் கவிதையா இருக்கு. எந்த நேரத்தில நானும் கவித எழுதினேனோ?!


ஹுஸைனம்மா on December 21, 2009 at 9:19 AM  

தலைப்பு நல்லாருக்கு. அதுவும் கவிதை. (அதுதான் புரியுது எனக்கு!!)


அன்புடன் மலிக்கா on December 21, 2009 at 9:31 AM  

/அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!/

வரிகள் அத்தனையும் கவிகனியாய் இனித்தது அருமை ஷபியண்ணா..

[டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா]

நல்லவேளை நாந்தான்னு போடலை:)


Jaleela Kamal on December 21, 2009 at 11:08 AM  

//என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா?//

நல்ல எழுதிட்டு இப்படி ஒரு டிஸ்கி போட்டு இருக்கீங்க


கவிதை வரிகள் அனைத்தும் அருமை,

எல்லாரும் கவிதையில புலியா இருக்காங்க‌ளே எப்படி?


ம்ம் க‌ல‌க்குங்க‌ க‌ல‌க்குங்க‌.


ஸாதிகா on December 21, 2009 at 11:15 AM  

கவிதை வரிகள் அருமை.


"உழவன்" "Uzhavan" on December 21, 2009 at 2:41 PM  

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)//
யாருப்பா அது? அவரு அட்ரசக் குடுங்க...ங்ங்.........................ஏன்னா அவருக்கு நன்றி சொல்லனும் :-)


சிநேகிதன் அக்பர் on December 21, 2009 at 4:47 PM  

கவிதையில் தேன் வழிகிறது.

இப்படியெல்லாம் எழுதத் தெரியும் போது. ஏன் எழுதாம இருக்கீங்க.


suvaiyaana suvai on December 21, 2009 at 5:27 PM  

அட க‌ல‌க்குங்க‌!!


நசரேயன் on December 21, 2009 at 6:10 PM  

//என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!//

விலாசம் இருந்தா கொடுங்க


Anonymous on December 22, 2009 at 8:24 AM  

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)


ஆணையிட்ட அரசி யாரோ?
அள்ளிக் கொடுங்கள் ஆயிரம் பொற்காசுகளை..... இந்த கவிஞன் அடிக்கடி எடுத்தியம்பட்டும் இப்படிப்பட்ட கவிதை மலர்களை நம்மேல் தொடுக்கட்டும்....


Anonymous on December 22, 2009 at 8:25 AM  

கழுகுப் பார்வை
முட்டி மோதியது திட்டமிட்டே வட்டமிட்டது வண்டின் கொடிய‌ அம்புகள்!!

கொடிய அம்புகள் முட்டி முறியடிக்கப்பட்டதா? மலரின் மகரந்ததிடம்....


Anonymous on December 22, 2009 at 8:26 AM  

காதல் மகரந்தம் நுகரத் துணிவில்லைமண்டியிட்டது மலரிடம் மானுட வேடம்!!


மண்டியிட்டது மானுட வேடம்...மிக்கச் சரியே மண்டியிட்டது மானிடனின் வேடமே...


Anonymous on December 22, 2009 at 8:28 AM  

அழகின் செருக்கில் மலரின் சிரிப்பு ஆதவன் ஒளியில்மின்னலாய் மிளிர்ந்தது!!


அழகின் செருக்கு....அற்புதம் இந்த வரிகள்

மலரின் செருக்கென சொல்லி மெருகேற்றியது மலருக்கு பெருமையும் சேர்த்தது....ஆதவனின் ஒளியில் மின்னலாய் மின்னியது...
அற்புதம் ஷஃபி..


Anonymous on December 22, 2009 at 8:29 AM  

கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது
தேனியில் ஊறிய தேவாமிர்தமாய்.....


Anonymous on December 22, 2009 at 8:31 AM  

உங்கள் கவிதைகளில் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மிகவும் என்னை கவர்ந்தது இந்த கவிதை...

கவிதை எழுதுவது திறமை என்றாலும்
அதை யாருக்காக எழுதறமோ அவங்க தாங்க அதிர்ஷடசாலி பெருமைக்குரியவர்களும் கூட.... இங்கு கவிதையை விட எழுதப்பட்டது யாருக்கோ என தேடுது விழிகள்...


Anonymous on December 22, 2009 at 8:32 AM  

sooooooooooosweeeeeeeeeeeeeeetttttttt shafi..................unga kavithai.....அடிக்கடி இப்படி எழுதுங்க நானும் கத்துகிறேன்..


Anonymous on December 22, 2009 at 8:33 AM  

ஜீவன் said...
//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
அட......! அசத்தல் கவிதை ஷஃபி...!
இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாரு..!;)

வழி மொழிகிறேன் எங்க இருந்தாரு இந்த கவிஞர்....


ஸாதிகா on December 23, 2009 at 5:14 PM  
This comment has been removed by the author.

ஸாதிகா on December 23, 2009 at 5:15 PM  

//வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!//
படபடக்கும் வரிகள் அருமை.
என்ன பிரதர் அழகான கவிதையை வடித்து விட்டு இப்படி ஒரு டிஸ்கி???


Mythreyi Dilip on December 24, 2009 at 1:51 AM  

Romba Nalla Kavithai. Arumai!!!


Merry Christmas and happy Holidays:)


Aruna Manikandan on December 24, 2009 at 9:59 AM  

Hi,

Kindly accept my award


சிங்கக்குட்டி on December 24, 2009 at 8:22 PM  

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html


SUFFIX on December 25, 2009 at 9:27 PM  

நன்றி @ gayathri (உங்களையுமா?)

நன்றி @ பா.ராஜாராம் (மிக்க மகிழ்ச்சி அண்ணா)

நன்றி @ நவாஸுதீன் (நீங்கதான் இருக்கியளே அசத்திடுவோம்)

நன்றி @ ஜீவன் (ஹா ஹா, அப்போப்போ கவிதை வரும் தலைவரே)

நன்றி @ goma (நல்ல வேளை லைஃப் பாய் சோப்புன்னு சொல்லாம இருந்தீங்களே)


SUFFIX on December 25, 2009 at 9:35 PM  

நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)

நன்றி @ நட்புடன் ஜமால் (என்னத்த சொல்றது ஜமால்)

நன்றி @ ஜெஸ்வந்தி (வாங்க ஜெஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிங்க)

நன்றி @ இராகவன் நைஜிரியா (அண்ணனே சொல்லியாச்சி அப்புறம் என்ன)


SUFFIX on December 25, 2009 at 9:44 PM  

நன்றி @ Chitra (நல்லபடியா கிருஸ்துமஸ் கொண்டாடிட்டு வாங்க)

நன்றி @அபுஅஃப்ஸர் (அப்படியெல்லாம் ஒன்னும் புதுசு இல்லை தலைவரே..ஹீ..ஹீ)

நன்றி @ Annam (வாம்மா வந்திட்டியா)

நன்றி @ அ.மு.செய்யது (அப்பா..தெம்பு வந்திருச்சு)

நன்றி @ ஹுஸைனம்மா (உங்கள் தன்னடக்கம் புரிகிறது, ரொம்ப நல்லவங்க‌)


SUFFIX on December 25, 2009 at 9:50 PM  

நன்றி @ பூங்குன்றன்.வே (மிக்க மகிழ்ச்சி நண்பரே)

நன்றி @ அன்புடன் மலிக்கா (சந்தோசம், நல்ல பிள்ளையா இது மாதிரி வந்து கருத்து சொல்லிப்புடணும்)

நன்றி @ Jaleela (ஹூசைனம்மா கவிதைய படிச்சும் உங்களுக்கும் ஒரு கவிதை எழுதணும்னு தோணலையா?)


SUFFIX on December 25, 2009 at 9:59 PM  

நன்றி @ ஸாதிகா

நன்றி @ உழவன் (ரொம்பவே புகழுகிறீர்கள் நண்பரே, மிக்க மகிழ்ச்சி)

நன்றி @ அக்பர் (இருந்தாலும் தாங்களின் எழுத்து நடை போல வராது அக்பர்)

நன்றி @ suvaiyaana suvai (கலக்கிடுவோம், ஒரு அகப்பை கொடுங்க)

நன்றி @ நசரேயன் (நீங்களே கண்டு பிடிங்க தலைவரே)

நன்றி @ தமிழரசி (அரசியின் அதிரட் அட்டாக், அழகான பின்னூட்டங்கள், அருமை)


SUFFIX on December 25, 2009 at 10:01 PM  

Thanks a lot Mythreyi Dilip

Thank you Aruna Manikandan.

நன்றி @ சிங்கக்குட்டி (மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன் நண்பரே)


malarvizhi on December 26, 2009 at 12:25 PM  

க‌ல‌க்குங்க‌!!ஷஃபி.


Mythreyi Dilip on December 29, 2009 at 3:43 AM  

Hi Shafi,
Wishing you and your family a very Happy and Prosperous New Year!!!!!


அன்புத்தோழன் on December 29, 2009 at 9:15 AM  

Annanukul irukum kavinganai adaiyalam kaatiya Anniku nandri....

"என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??"

Anniyin Annamandri verennavaga iruka mudiyum.... he he.....

keep up the good work bro...


SUFFIX on December 29, 2009 at 2:28 PM  

நன்றி @ malarvizhi (கலக்கிடிவோம்)

Thanks @ Mythreyi Dilip (Wish you as well a very Happy New Year!!!!!)

நன்றி @ Najim


வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... on December 29, 2009 at 3:53 PM  

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!


நிஜமா நல்லவன் on January 4, 2010 at 3:12 PM  

/ SUFFIX said...

நன்றி @ நிஜமா நல்லவன் (உண்மையிலேயே நிஜமா நல்லவரா?)/


Theriyalai:)