|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த தேனம்மை அக்கா அவர்களுக்கு நன்றி, வேலை பளு காரணமாக சுடச்சுட இட வேண்டிய பதிவு, இவ்வளவு நாள் தாமதத்தி வந்தமைக்கு மன்னிக்கவும்.

நண்பர்களின் எல்லா பதிவுகளிலுமே இந்த பத்துக்கு பத்து வலம் வந்து விட்டது, பரவாயில்லைன்னு இதையும் படிச்சுடுங்க‌.

1) சில நாட்களுக்கு NPRல் ஷீனா ஐயங்காருடைய பேட்டியை கேட்க நேர்ந்தது, இவருடைய ஆராய்ச்சி, அவர் எழுதிய படைப்புகளை விவரித்த விதம், மேலும் தெரிந்து கொள்ளலாம் என வலையில் தேடிய போது, விடயங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

அவர் சோசியல் சைக்காலஜி துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார், நம்முடன் என்றும் சுழன்று கொண்டிருக்கும் தேர்வு செய்தல் பற்றி சமீபத்தில் The Art of Choice எனற அவரது புத்தகம் வெளிவந்துள்ளது. உதாரணமாக வீட்டைவிட்டு செல்லும் முன் இந்தக் கலர் போன் தான் வாங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு போவோம், ஆனால் கடைக்கு சென்றதும் வேறு ஒன்றை வாங்கி வந்து விடுகிறோம், இது போல நாம் தெரிவு செய்யும் நட்பு, நபர்கள், என அடுக்கிக் கொண்டு போகலாம்.

இன்றைய போட்டி நிறைந்த ரீடெயில் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்களின் மன நிலையை அறிந்து வியாபாரத்தில் ஈடுபடுவது, நிறுவாகத்திறனை ஒருமுகப்படுத்த, உறவுகள் மேம்படவும் இது போன்ற ஆக்கங்கள் உதவக்கூடும். இவரது இன்னும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இவரைப் பற்றி மேலும் அறிய‌ http://www.columbia.edu/~ss957/book.shtml.

2) தனது மருமகளை, மகளாய் நினைக்கும் மாமியார்கள், இந்த உறவிற்குள் கீறல்கள் விழுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆழ யோசித்தால் பெரும்பாலும் பிரச்னை எளிதானதாகவே இருக்கும்.

3) எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஆண்கள் பிரிவிலும் அதற்கு கீழ் பெண்கள் பிரிவிலும் சேர்த்து இருந்தார்கள், ஆனால் இந்த ஆண்டு முதல் மூன்றாம் வகுப்பையும் பெண்கள் பிரிவுடன் சேர்த்து விட்டார்கள், காரணம், இந்த சிறார்களை சமாளிக்க முடியவில்லையாம். ஆம், அந்தப் பொறுமையும் பொறுப்பும் பெண் ஆசிரியைகளுக்கே உரித்தான ஒன்று.

4) சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பணிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள். அவர்கள் பேருந்துக்காக காத்திருந்து, இடிபாடுகளுக்கிடையே பயணித்து, அலுவலக வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் சுமந்து செல்லும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

5) சினிமா பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை, ஆனால் பாடல்கள் கேட்பதுண்டு. பிடித்த பாடகிகள் (லிஸ்ட் பெரிசாயிடுச்சு):

தமிழ் : சித்ரா & அணுராதா ஸ்ரீராம்

ஆங்கிலம் : செலின் டியோன் & ஸ்விஃப்ட் டைலர்

ஹிந்தி : அல்கா யாக்னிக் & அணுராதா படுவால்

6) தொழில் அதிபர் : கிரன் ம‌ஜும்தார் - சாதாரன ட்ரைனியாக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று பயோகான் நிறுவனத்தை செம்மையாக நடத்தி வருகிறார்.

7) டென்னிஸ் வீராங்கனை : ஸ்டெஃபி கிராஃப்

8) குடும்பத்தலைவி : சோனியா காந்தி

9) அரசியல்வாதி : ஜெயலலிதா

10) பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.










இந்தியப் பிரதமர் சவூதி வருகை

சில தினங்களுக்கு முன் நமது இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சவூதி அரேபிய தலை நகர் ரியாத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருந்தார், முப்பது வருடங்களுக்கு முன்னர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ச்வூதி அரேபிய பயணத்திற்கு பின் தற்பொழுது வருகை தரும் நமது பிரதமரை சவூதி மன்னரும், அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் வெகு விமர்சையாக வரவேற்றனர். நான் ஜித்தாவில் இருந்தாலும் மூன்று நாட்களும் இங்குள்ள் நாளேடுகளில் அவரது பயணம் குறித்து விரிவான செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.

கல்வி, பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதினோறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் அலுவலகம் இந்தியாவில் தொடங்குவது, இங்குள்ள அரசு பள்ளிகளுக்கு டாடா பேருந்துகள் வாங்குவது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பத்திரிக்கை துறை செயல்பாடுகள், கணினித்துறையில் கூடுதல் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இங்குள்ள் பல்கலை கழகத்துடன் இந்தியப் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டன். வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

நில நடுக்கம் ஹைத்தி/சிலி:

சென்ற மாதம் ஹைத்தியிலும் அதனையடுத்து சிலியிலும் பயங்கர நில நடுக்கம், சிலியில் (8.8) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, இருந்தாலும் அங்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர், ஆனால் சிலியில் ஆயிரத்திற்கும் குறைவானோரே இறந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? பொருளாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.

சிலியின் பெரும்பாலான கட்டிடங்கள் நில நடுக்கத்தை தாங்கவும், இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு தரப்பட்டது. ஆனால் ஹைத்தியில் அவர்கள் இடிபாடுகளிக்கிடையே சிக்கி, கான்க்ரீட் கற்கள் மேலே விழும்போது, பாதுகாப்பாக அங்கிருந்து ஓடவோ, தற்காத்துக் கொள்ளவோ அவர்களுக்கு பயிற்சியளிக்கப் படவில்லை, அச்சத்தால் அங்கெங்கும் சிதறி ஓடி மரித்தவர்களே ஏராளம்.

Money is not everything, but it is something.

டிப்ஸ்:

மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா, இதோ சில குறிப்புகள்:
1. குறைந்தது ஆறு மணி நேரம் உறக்கம்.
2. உணவில் கட்டுப்பாடு
3. தினமும் அரைமணி நேரமாவது வேக நடை பயிற்சி (brisk walking)