|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts




அன்பு நன்பர் நட்புடன் ஜமால் எனை ஊக்கப்படுத்தி மகிழ்வித்த இந்த விருது!! சம்பிரதாயப்படி இந்த விருதை நம் பதிவுலக‌ நன்பர்களுக்கு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாம், விருது கொடுக்கும் தகுதி இந்தப்புதிய பதிவாலனுக்கு சுமத்தப்பட்ட சுகமான‌ சுமை தான். இங்கு பழம்பெரும் மூத்த பதிவாலர்களுக்கு இந்த விருதை அளிப்பதில் பெருமைப்படுகின்றேன்.

இவரது எழுத்துக்களில் அவருடைய ஆழமான் உழைப்பும், அது பற்றிய நுண்ணறிவும் இருக்கும், Teaching Skills இவரிடம் நிறையவே இருக்கிறது. சமீபத்தில் வலைப்பூ சம்பந்தமான தொழில் நுட்பக்கூறுகளை பதிவாக போட்டு புரட்சி செய்துவரும் சுமஜ்லா.


இவருடைய கவிதைகளில் சமுதாயப்புரட்சியும், ஆதங்கமும் சீறி எழும், அதற்க்கு சாட்சி சமீபத்திய அவருடைய படைப்பு 'சீதைகளை சிதையில் ஏற்றாதீர்'.... அவரே தான் சக்தி


கவிதைக்கு ஒர் அரசி, தனது ஓசையையே கவிதையாக்கி மகிழ்த்திடுவார், இவருடைய கவிதைகளின் ரசிகர் பட்டாளத்தில் நானும் ஒருவன், இவர் தான் எங்கள் தமிழரசி.


அவர் கவிதைக்கு அரசியென்றால் இவர் சமையற்கலையில் அரசி, அது மட்டுமல்லாது வீட்டு பராமரிப்பு குறிப்புகளை மிகச்சிரத்தையுடன் பகிர்ந்து வருகிறார். இவர்தான் ஜலீலா


அழகிய சிறு கவிதைகளை படைத்து வருபவர். என்னுடைய ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் இவரும் ஒருவர். இவருடைய கவிதை 'சுவாசம்', நான் படித்து ரசித்தவற்றில் ஒன்று. இவர்தான் ரோஸ்.

சமீபத்தில் இவருடைய சிறு கவிதைகளை படித்தேன். மிகவும் எதார்த்தமாக இருக்கும் இவர் கவி வரிகள். இவருடைய ஆக்கங்கள் "ஏக்கம்" மற்றும் "வெட்கம்", சிறிய வரிகளானாலும், ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள் காயத்ரி!!

நன்றி நன்பர்களே!!


Posted on 12:53 PM

<>மகிழ்வித்த ஜமால்

Filed Under () By SUFFIX at 12:53 PM

மகிழ்ச்சி மழை எனது தோட்டத்தில், ஆம் இந்த வாரம் ந‌ன்பர் நட்புடன் ஜமால் ஜொலிக்க வைத்த வைரக்கிரீடம், சென்ற வாரம் எங்கள் வலைப்பூ அக்கா தமிழ் அரசி வலைச்சரத்தில் வழங்கிய தங்கப்பதக்கம்!!
**நன்றிகள் என் அன்பு நெஞ்சங்களுக்கு**
முகம் தெரியா முல்லை பூக்கள், நட்பு மட்டும் நன்றாய் தெரிந்த நட்பூக்கள், வந்தேன் விருந்தாளியாகத்தான், சொந்தமாக்கி கொண்டாடிய தங்க நெஞ்சங்கள்!! இப்படி அடுக்கிக்கொன்டே போகலாம் ஆலமரமாய் வளர்ந்து வரும் நம் நட்பை!
வாழ்க நன்பர்களே!! வளர்க நட்புடையோர்களே!!


என்னை ஒரு வலைப்பதிவாளனாக மதித்து அழகிய முறையில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய எங்கள் வலைப்பதிவு அக்கா தமிழரசியாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை இந்த அழ‌கிய‌ பூந்தோட்ட‌த்திற்க்கு அழைத்து வ‌ந்து‌ உங்க‌ள் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்திய‌ நவாஸிர்க்கு ந‌ன்றிக‌ள் பல‌. அடுத்து கிடைத்த‌ அற்ப்புத‌ ஜாம்ப‌வான்க‌ள் ஜ‌மாலும் அபூஅஃப்ச‌ரும், இவ‌ர்க‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள்.

என‌து ஆக்க‌க‌ங்க‌ளுக்கு த‌வ‌றாம‌ல் பின்னூட்ட‌மிட‌ம் செய்யது, ரோஸ், சும‌ஜ்லா, ஜ‌லீலா, அக்பர், சர்ஃப்ராஸ், முகேஷ் ம‌ற்றும் புதிய‌ ந‌ன்ப‌ர்க‌ள் ச‌க்தி, ர‌ம்யா, வ‌சந்த், தேவ‌ன்மய‌ம், ந‌சரேய‌ன், மயாதி, சுரேஷ் அனைவ‌ருக்கும் ம‌ன‌மார்ந்த ந‌ன்றிக‌ள்.

இன்னும் சிற‌ந்த‌‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் உங்க‌ள் அனைவ‌ரின் ஆத‌ர‌வை நாடும் உங்க‌ள் அன்பு ந‌ன்ப‌ன் "ஷ‌ஃபி".