|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 6:54 PM

கலைடாஸ்கோப்

Filed Under () By SUFFIX at 6:54 PM

பாலைவன வெப்பம்

சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்டு இருக்கிறது. இந்த மிகை வெப்பத்தினால் ஜித்தா நகரத்தில் மட்டும் தினசரி நாற்பது தீ விபத்துகள் நிகழ்வதாக நேற்றைய செய்த்தித்தாளில் படித்தேன். மின்சாரக் கோளாறு மற்றும் வாகனங்களில் என்ஜின் சூடாவது போன்றவைகளால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறதாம். இயற்கை நிகழ்வை நாம் கட்டுப்படுத்த முடியாது தான், ஆனால் நம்மையும் சுற்றுப் புறத்தையும் பராமரிக்கலாமே?

நமக்கு:

அவசியமில்லாமல் வெயிலில் லைய வேண்டாம், செய்ய வேண்டிய காரியங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, நேரம் வகுத்து செயல பட வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.

எண்ணையில் பொறித்த உணவு வகைகளை மதிய நேரங்களில் குறைத்துக் கொலள்ளலாம்.

வாகனங்களுக்கு:

என்ஜின் அதிக சூடாகும், இதனால் கூலன்ட் நீரை பார்ப்பதுடன் ப்ரேக், கியர், என்ஜின் ஆயிலையும் பார்த்துக் கொள்ளவும்.

கதவுக் கண்ணாடிகளை காற்று புகும் அளவிற்கு சிறிது இடைவெளிவிட்டு மூடவும்.

டேஷ்போர்டு சூடாகாமல் இருக்க விண்டு ஷீல்டு கவர் போடலாம்

வாகனத்தை ஸ்டார்ட் செய்து உடனே ஏர்கண்டிஷனை போடாமல், சிறிது நேரம் ஃபேனை மட்டும் போட்டு காற்றோட்டத்தை சீர் செய்யவும்.

உலக போதை ஒழிப்பு நாள்

சமுதாயத்தை சீரழித்து வரும் இந்தப் பழக்கத்தை எப்படி ஒழிக்கப் போகிறார்களோ? ஒவ்வொரு தனி மனிதனும் தவறை உணர்ந்தால் ஒழிய இதனை ஒழிப்பது பெரும்பாடே. இத்தீய பழக்கத்தினை ஒழிப்பதில் பெற்றோர்களின் பங்கும் மிகவும் முக்கியம். த‌மது குழந்தைகளின் நடவடிக்கைகளை சரிவர கவனிக்க வேண்டும், அக்கால அதிரடி நடவடிக்கைகள் தற்கால குழந்தைகளிடம் அத்தனை செல்லுபடியாகாது, அவர்களது உணர்வுகளை புரிந்து, அவர்களின் எண்ணங்களை நம்முடன் தெளிவாக பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நாம் மாற‌ வேண்டும். போதை பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்தக் கொடிய புகை பழக்கத்தையும் அடியோடு நிறுத்திடலாமே?

'கடி'காரம்

வீட்டின் ஹாலில் உள்ள கடிகாரம் திடிரென நின்று விட்டது, எங்களுடைய சிறிய மகன், ஹாலிற்கும், அறைக்கும் ஒரே சமயத்தில் தான் கடிகாரம் வாங்கி, புதிய பேட்டரியும் போட்டோம், ஆனா அது ஓடுது, இது மட்டும் நின்னுடுச்சே என சந்தேகத்தை கிளப்பினான், ஆமா சைனா கடிகாரம், மெஷின் எப்போ நிக்கும் எப்போ ஓடும்னு சொல்ல முடியாதுன்னு சொல்லிப் பார்த்தேன், இல்லாட்டி இந்தக் கடிகாரத்தை நாம அடிக்கடி பார்க்குறோம், அறைல உள்ளத அவ்வளவா பார்க்குறதில்லை அதனால இருக்குமோன்னு, ஒரு மொக்கை பதிலையும் சேர்த்து சொல்லி வச்சேன். அவனுக்கு இரண்டு பதில்களும் பிடிச்சுருந்தது, உங்களுக்கு?

Posted on 11:30 AM

பணத்தானி - ATM

By SUFFIX at 11:30 AM


நினைத்துவடன் அட்டையைப் போட்டு, அடுத்த கணத்தில் பணத்தை கைக்குள் திணித்து விடும் 'பணத்தானி' (பணம் தா நீ) என செல்லமாக அழைக்கப்படும் ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டு பிடித்த ஸ்டெஃபர்டு பாரன் (Shepherd-Barron), கடந்த வாரம் காலமானார், இவர் 1925ம் வருடம் இந்திய மண்ணில் ஸ்காட்லாந்திய பெற்றோர்களுக்கு பிறந்தார். நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு கடையில் மிட்டாய் வாங்கும்போது டிஸ்பன்சர் சாதனத்தை பார்த்திருக்கிறார், நம்மை மாதிரி மிட்டாயை வாயில போட்டுகொண்டு அப்படியே போய்விடாமல் , இந்த தொழில் நுட்பத்தை வேறு விதமாக உபயோகப்படுத்தினால் என்னன்னு யோசிச்சு, இந்த ஏ.டி.எம்மை கண்டு பிடித்தாராம். இது ஒரு நல்ல கண்டு பிடிப்பு என பிரிட்டன் பார்க்லேஸ் வங்கியும் இந்த தொழில் நுட்பத்தை வாங்கிக் கொணடது.

எதுவா இருந்தாலும் தன்னோட தங்க்ஸ்கிட்டே சொல்லிட்டு அவங்க சொல்றத செய்துடுவார் போல, அதே போல இந்த மெஷினுக்கு ஆறு இலக்க எண்ணை பாதுகாப்பு குறியீடாக வச்சிருந்தாராம், ஆனா தங்கஸ் நாலு இலக்கமா மாத்தினா நல்லா இருக்கும்னு சொன்னதுக்கப்புறம், அவங்க ஆசைப்படியே செய்துட்டார்.

இந்த மெஷினில் இது வரை விருப்பபட்டு கேட்ட பணத்திற்கு குறைவாக வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்த பலருக்கு பக்கத்தில் ஒரு சுழியன் சேர்த்தே பணம் கொட்டியிருக்கிறது, இப்படி கிடைக்கும் பணத்தை நாம் பதுக்கிக் கொள்வதும் திருடுதலே, அதை சம்பந்தப்பட்ட வங்கியில் கொடுப்பதே முறை, எது நமக்கு சொந்தம் இல்லையோ அதை உரிமை கொண்டாடுவது திருட்டு தானே? ஒருவருக்கு நமது நாட்டு நாணய மதிப்பில் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ரியால்கள் வந்து விழுந்துவிட்டதாம், இவர் கணக்கில் இருந்ததோ சில ஆயிரங்களே, அன்று மாலை அவர் வங்கிக்கு போய் திரும்ப கொடுத்து விட்டார், அவர்களும் ரொம்ப சுலபமாக, நன்றின்னு சொல்லிட்டு வாங்கிக் கொண்டார்களாம்,ஒரு பாராட்டு கூட இல்லையாம், ஏமாற்றமாட்டார்கள் எனற நம்பிக்கையா? அல்லது திருடினாலும் கண்டு பிடித்து விடக்கூடிய தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டதன் வெளிப்பாடா?

சில வருடங்களுக்கு முன் மற்றொரு நபர் இப்படி சில லட்ச்ங்கள் எளிதாகக் கிடைத்து, அன்றைய தினமே, ஊருக்கு எமர்ஜன்சியில் சென்று, தன்னிடம் சேமிப்பு பணத்துடன் இந்த பணத்தையும் வைத்த் தொழில் தொடங்கியிருக்கிறார், தொடர்ந்து நஷடம், சமாளிக்க முடியவில்லை, உள்ளதையும் தொலைத்து, மீண்டும் அயல் நாட்டிற்கே வந்து, முன்னர் இருந்ததைவிட கடினமான வேலையும், சம்பளம் குறைவாகவும் கொடுக்கும் நிறுவனத்தில் சேர்ந்தாராம், ஏனிந்த பேராசை? இந்த மெஷின்களை கூண்டோட தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்கள் என‌ அடிக்கடி செய்திகள் வேறு வருகிறது.

இங்கே மற்றொரு விடயமும் சொல்லணும், மெஷினிலிருந்து காசை எடுக்கும்போதும், கணக்கை சரிபார்க்கும்போதும், பிரிண்ட் வேண்டுமா எனக் கேட்கும், பெரும்பாலும், தேவை இருக்கோ இல்லையோ, அதை பிரிண்ட் எடுத்து, அப்படியே தூக்கி எறிந்து விடுகிறோம், அதற்கு பதில் திரையிலேயே சரிபார்த்துக் கொள்ளலாமே, மிகவும் அவசியமெனில் பிரிண்ட் எடுக்கலாம். சுற்றுப் புறச்சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி மிட்டாய்ல தொடங்கி, இப்போ என்னடான்னா தங்கக்கட்டிகளை தரும் அளவிற்கு இந்த சாதனம் பயன்படுகிறது. சமீபத்தில் அபூதாபியில் இந்த தங்க முட்டை இடும் வாத்தை கொண்டு வந்து வைத்து இருக்கிறார்கள், இனி தட்டுப்பாடு தங்கத்திற்கா, இல்லை பணத்திற்க்கா? சும்மா இன்றைய தங்க நில‌வரம் எப்படி இருக்குன்னு வலையில் பார்த்தேன், நெஞ்சம் 'தக் தக்' என்கிறது!!

Posted on 9:07 AM

கலைடாஸ்கோப்

Filed Under () By SUFFIX at 9:07 AM

ங்களோட அலுவலகம் பத்தாவது மாடியில் இருக்கிறது, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகை பிடிப்பது முற்றிலும் இங்கே தடை, அப்படி யாரேனும் புகை பிடித்தே ஆக வேண்டுமென்றால், தரை தளத்திற்கு போய் புகை விட்டு வரவேண்டும், இரண்டு நாளைக்கு முன் அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து ஒரே புகை மயம், என்ன காரணம் எனக் கேட்டால், ஜப்பானிலிருந்து பெரிய டெலிகேட்ஸ் வந்திருக்காங்க, சாப்பாடு இல்லாம கூட இருந்துடுவாங்களாம் ஆனா சிகரெட் இல்லாம இருக்க மாட்டாங்களாம் அதனால இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!

*************

ழக்கம்போல் மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் கிடைக்கவில்லை, கால் மணி நேரம் சுற்றி சுற்றி வந்தும் உஹூம், சரி ஒரு பத்து நிமிட வேலை தானே என ஒரு திருப்பத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்தால், என்னோட காரில் சங்கிலியை கட்டி இழுத்து போவதற்கு தயாராக இருந்தார்கள், அருகில் ஒரு போலீஸ், வண்டி ஓட்டுனர் ஒரு பங்காளேதேஷி, அவரிடம் நண்பா நாமெல்லாம் பக்கத்து ஊர்க்காரங்க, விட்டுருன்னு சும்மா சொல்லிப் பார்த்தேன், அதெல்லாம் நஹி நஹின்னுட்டார், அப்புறம் போலிஸிடம் போய் ஹாதா..ஹூதான்னு ஏதோ நமக்கு தெரிஞ்ச அரபியில் சொல்லி, அவரையும் ரொம்ப நல்லவராக்கி, வழிக்கு வந்த நேரத்தில் அவருக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திருச்சு, ஆமா இதுமாதிரி பிடிக்கரவங்களயெல்லாம் நான் விட்டுட்டு இருந்தா என்னோட மேலதிகாரிக்கு நான் என்ன சொல்றது, அதனால நான் இந்த சீட்டுல ஏதாச்சும் எழுதிக்கிறேன்னு பேரு, ஐ.டி. நம்பர் மட்டும் எழுதிக்கொண்டார், ஆனா அபராதம் வராதுன்னு சமாதப்படுத்தினார், அதெப்படி? அவர் ஒரு பிங்க் நிற நோட்டிஸ் தந்தால் தான் சிஸ்டத்தில் தகவல்கள் ஏறுமாம், என்னவோ நல்லதே நடக்கட்டும், இது வரை முயற்சி செயத அந்தப் போலீஸ் வாழ்க!!

************

சைனாவில் ஒரு பால் பாயிண்ட் பேனா தயாரிக்கும் ஒரு கம்பெனிக்கு 1,000 டாலர் அபராதம் விதித்திருக்காங்களாம், என்ன காரணமென்றால், ’அமேரிக்க அதிபர் ஒபாமாவே எங்களோட பேனாவை தான் உப்யோகிக்கிறார்’னு விளம்பரப்படுதியிருக்காங்க!! யாரு கண்டா உண்மையா இருந்தாலும் இருக்கும்!!

***********

நேற்று டி-20 உலகக்கோப்பை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் மோதியது, நமது ஆசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று இறுதி வரை வந்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்து பார்த்திருக்கலாம்.

Posted on 7:00 AM

ஏதோ....

Filed Under () By SUFFIX at 7:00 AM

வந்தும் சென்றும்
கால்களை நனைத்தது
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்
ஆழம் வேண்டாமே!!
எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!


கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தெரிந்து கொண்டதோ!!

Posted on 9:07 AM

துபாய் - BSC Forum 2010

Filed Under () By SUFFIX at 9:07 AM

சென்ற வாரம் Balanced Scorecard (BSC) Forum 2010 துபாயில் நடைபெற்றது, இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி, இதனை உருவாக்கிய Dr. David Norton & Dr. Robert Kaplan இருவரையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள் முடிந்தது. உலக நாடுகளின் பல முன்னனி நிறுவனங்களின் மேலாளர்களும் வந்து, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் Vice President தமது சாதனைகளை பகிர்ந்ததது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை (Financial measures) மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவார்கள், ஆனால் BSC முறைப்படி மனித வளம் (Human Resources), உள்கட்ட செயல்பாடு(Internal Process), வாடிக்கையாளர்கள் (Customers) இவைகளையும் அளவிட்டு பார்க்கவேண்டுமாம், இதனை நிர்வாகத்தின் மேலிருந்து, கீழ் மட்டம் வரை எப்படி அணுகுவது எனபது குறித்தே இந்த ஐந்து நாட்கள் கலந்துரையாடல். நல்ல பல புதிய அனுபவங்கள்.

பல நாடுகளிலிருந்து மொத்தம் 77 நபர்கள் இதில் கலந்து கொண்டனர், ஏழு பேர் இந்தியர்கள், துபாயில் பணி புரியும் திருச்சியை சேர்ந்த சந்திரசேகரனும் நானும் தமிழர்கள், பாவம் அவருக்கு தமிழ் மறந்து விட்டது போலும், என்னுடன் ஆங்கிலத்திலேயே பேசினார், ஏனோ மனது ஒட்டவில்லை. ஆனால், கலந்து கொண்ட இரண்டு மலையாளிகள் மிகவும் சிரமப்பட்டு என்னுடன் தமிழில் பேச முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அமீரகத்தின் பல அரசு நிறுவனங்கள், குறிப்பாக துபாய், அபுதாபி மற்றும் அஜ்மான், இந்த BSC முறையை செயல்படுத்த முனைப்புடன் இருப்பது நல்ல விடயம், நமது தலைநகர் டெல்லியின் Power & Water Supply துறையில் இதனை தொடங்கியிருப்பதாக சொன்னார்கள்.

சவூதியிலிருந்து துபாய் செல்வோர்க்கு விசா எடுப்பது மிக எளிது, ஏர்போர்ட்டில் 185Dhs கட்டிவிட்டால் உடனே விசா தயார். துபாயின் பொருளாதாரம் சற்று பரவாயில்லை என நினைக்கிறேன், விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது, பழையபடி திரும்ப இன்னும் வருடங்கள் பிடிக்கும், சென்ற முறை 1,600 Dhs இருந்த ஹோட்டல் அறை தற்பொழுது 400 Dhs, ஆச்சர்யத்துடன் பரிதாபமாகவும் இருந்தது.

மெட்ரோ ரயில் எப்படித்தான் இருக்கிறது என பார்க்கலாம் என புர்ஜ்மானிலிருந்து, புர்ஜ்கலீபா வரை சென்றேன், நல்ல முயற்சி, இன்னும் விரிவு படுத்தினால் பலருக்கு உபயோகமாக இருக்கும். துபாயை பொருத்த வரை, எல்லா இடங்களிலும் வழிகாட்டி புத்தகம், வரைபடம் வைத்திருக்கிறார்கள், அதனால் யாரிடமும் அது எங்கே, இது எங்கே என கேட்கும் தேவை மிகக் குறைவு. துபாய் மால் பார்க்க வேண்டிய ஒன்று, சுற்றவே ஒரு நாள் வேண்டும் என நினைக்கிறேன். எங்களது அலுவலகத்தின் சேல்ஸ் டிவிஷன் மூலமாக துபாய் மாலின் கீழ்தளத்தில் இருக்கும் நண்டூஸ் ரெஸ்டாரண்டில் விருந்து ஏறபாடு செய்திருந்தார்கள், மொசாம்பிக்/போர்ட்ச்கீஸ் வகை சாப்பாடு வகையாராக்கள், புதிதாகவும், சுவையாகவும் இருந்தது.

பல நண்பர்களை சந்திக்கலாம் எனவே நினைத்திருந்தேன், அலுவலக வேலை, கான்ஃபரன்ஸ் என நேரப் பற்றாக்குறை, மற்றும் பல நண்பர்கள் ஷார்ஜா போன்ற தூர தொலைவில் தங்கியிருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, வருத்தமாகவே இருந்த்து. இறைவன் நாடினால் அடுத்த முறை சந்திக்கலாம்.

BSC குறித்து மேலும் தகவல்கள் பெற விரும்புவோர், இங்கே தேடலாம் https://www.balancedscorecard.org/

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த தேனம்மை அக்கா அவர்களுக்கு நன்றி, வேலை பளு காரணமாக சுடச்சுட இட வேண்டிய பதிவு, இவ்வளவு நாள் தாமதத்தி வந்தமைக்கு மன்னிக்கவும்.

நண்பர்களின் எல்லா பதிவுகளிலுமே இந்த பத்துக்கு பத்து வலம் வந்து விட்டது, பரவாயில்லைன்னு இதையும் படிச்சுடுங்க‌.

1) சில நாட்களுக்கு NPRல் ஷீனா ஐயங்காருடைய பேட்டியை கேட்க நேர்ந்தது, இவருடைய ஆராய்ச்சி, அவர் எழுதிய படைப்புகளை விவரித்த விதம், மேலும் தெரிந்து கொள்ளலாம் என வலையில் தேடிய போது, விடயங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

அவர் சோசியல் சைக்காலஜி துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார், நம்முடன் என்றும் சுழன்று கொண்டிருக்கும் தேர்வு செய்தல் பற்றி சமீபத்தில் The Art of Choice எனற அவரது புத்தகம் வெளிவந்துள்ளது. உதாரணமாக வீட்டைவிட்டு செல்லும் முன் இந்தக் கலர் போன் தான் வாங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு போவோம், ஆனால் கடைக்கு சென்றதும் வேறு ஒன்றை வாங்கி வந்து விடுகிறோம், இது போல நாம் தெரிவு செய்யும் நட்பு, நபர்கள், என அடுக்கிக் கொண்டு போகலாம்.

இன்றைய போட்டி நிறைந்த ரீடெயில் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்களின் மன நிலையை அறிந்து வியாபாரத்தில் ஈடுபடுவது, நிறுவாகத்திறனை ஒருமுகப்படுத்த, உறவுகள் மேம்படவும் இது போன்ற ஆக்கங்கள் உதவக்கூடும். இவரது இன்னும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இவரைப் பற்றி மேலும் அறிய‌ http://www.columbia.edu/~ss957/book.shtml.

2) தனது மருமகளை, மகளாய் நினைக்கும் மாமியார்கள், இந்த உறவிற்குள் கீறல்கள் விழுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆழ யோசித்தால் பெரும்பாலும் பிரச்னை எளிதானதாகவே இருக்கும்.

3) எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஆண்கள் பிரிவிலும் அதற்கு கீழ் பெண்கள் பிரிவிலும் சேர்த்து இருந்தார்கள், ஆனால் இந்த ஆண்டு முதல் மூன்றாம் வகுப்பையும் பெண்கள் பிரிவுடன் சேர்த்து விட்டார்கள், காரணம், இந்த சிறார்களை சமாளிக்க முடியவில்லையாம். ஆம், அந்தப் பொறுமையும் பொறுப்பும் பெண் ஆசிரியைகளுக்கே உரித்தான ஒன்று.

4) சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பணிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள். அவர்கள் பேருந்துக்காக காத்திருந்து, இடிபாடுகளுக்கிடையே பயணித்து, அலுவலக வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் சுமந்து செல்லும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

5) சினிமா பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை, ஆனால் பாடல்கள் கேட்பதுண்டு. பிடித்த பாடகிகள் (லிஸ்ட் பெரிசாயிடுச்சு):

தமிழ் : சித்ரா & அணுராதா ஸ்ரீராம்

ஆங்கிலம் : செலின் டியோன் & ஸ்விஃப்ட் டைலர்

ஹிந்தி : அல்கா யாக்னிக் & அணுராதா படுவால்

6) தொழில் அதிபர் : கிரன் ம‌ஜும்தார் - சாதாரன ட்ரைனியாக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று பயோகான் நிறுவனத்தை செம்மையாக நடத்தி வருகிறார்.

7) டென்னிஸ் வீராங்கனை : ஸ்டெஃபி கிராஃப்

8) குடும்பத்தலைவி : சோனியா காந்தி

9) அரசியல்வாதி : ஜெயலலிதா

10) பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.










இந்தியப் பிரதமர் சவூதி வருகை

சில தினங்களுக்கு முன் நமது இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சவூதி அரேபிய தலை நகர் ரியாத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருந்தார், முப்பது வருடங்களுக்கு முன்னர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ச்வூதி அரேபிய பயணத்திற்கு பின் தற்பொழுது வருகை தரும் நமது பிரதமரை சவூதி மன்னரும், அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் வெகு விமர்சையாக வரவேற்றனர். நான் ஜித்தாவில் இருந்தாலும் மூன்று நாட்களும் இங்குள்ள் நாளேடுகளில் அவரது பயணம் குறித்து விரிவான செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.

கல்வி, பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதினோறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் அலுவலகம் இந்தியாவில் தொடங்குவது, இங்குள்ள அரசு பள்ளிகளுக்கு டாடா பேருந்துகள் வாங்குவது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பத்திரிக்கை துறை செயல்பாடுகள், கணினித்துறையில் கூடுதல் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இங்குள்ள் பல்கலை கழகத்துடன் இந்தியப் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டன். வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

நில நடுக்கம் ஹைத்தி/சிலி:

சென்ற மாதம் ஹைத்தியிலும் அதனையடுத்து சிலியிலும் பயங்கர நில நடுக்கம், சிலியில் (8.8) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, இருந்தாலும் அங்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர், ஆனால் சிலியில் ஆயிரத்திற்கும் குறைவானோரே இறந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? பொருளாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.

சிலியின் பெரும்பாலான கட்டிடங்கள் நில நடுக்கத்தை தாங்கவும், இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு தரப்பட்டது. ஆனால் ஹைத்தியில் அவர்கள் இடிபாடுகளிக்கிடையே சிக்கி, கான்க்ரீட் கற்கள் மேலே விழும்போது, பாதுகாப்பாக அங்கிருந்து ஓடவோ, தற்காத்துக் கொள்ளவோ அவர்களுக்கு பயிற்சியளிக்கப் படவில்லை, அச்சத்தால் அங்கெங்கும் சிதறி ஓடி மரித்தவர்களே ஏராளம்.

Money is not everything, but it is something.

டிப்ஸ்:

மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா, இதோ சில குறிப்புகள்:
1. குறைந்தது ஆறு மணி நேரம் உறக்கம்.
2. உணவில் கட்டுப்பாடு
3. தினமும் அரைமணி நேரமாவது வேக நடை பயிற்சி (brisk walking)