|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Posted on 7:00 AM

ஏதோ....

Filed Under () By SUFFIX at 7:00 AM

வந்தும் சென்றும்
கால்களை நனைத்தது
கரையோற அலைகள்,
இன்பம்;
இங்கேயே இருக்கலாம்
ஆழம் வேண்டாமே!!
எட்ட இருந்தும்
கிட்ட இருக்கும் சிரிப்பு
இங்கேயும் இருக்கு
நிலா!!


கைகள் வருடிய
தென்றல்
கன்னங்களையும்
வருடுகிறது
தென்றலும்
தெரிந்து கொண்டதோ!!

Posted on 2:01 PM

கணப் பொழுதுகள்

Filed Under () By SUFFIX at 2:01 PM

Picture Source :http://i.d.com.com

உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்

விழிகளில் வழிந்தோடும்
விசும்பல்கள்

படர்ந்து சுழலும்
உணர்வலைகள்

தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்

மோக முட்கள்
கீற‌ல்கள் மேனியெங்கும்

வதைக்கும் வெதும்பல்கள்
வெப்பக் கதிர்வீச்சு

கனவுகளால் தொடரும்
பொழுதுகள் கண‌ம்

தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?

Posted on 12:30 PM

தீர்வு

Filed Under () By SUFFIX at 12:30 PM


சின்ன வயசு
சிகரெட் ஆசை
சிறிதாய் சீண்ட‌
சுலபமாய் பற்றியது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

மதுப் பழக்கம்
மதி மயக்குமாமே
மெதுவாய்‌ தீண்ட‌
அதுவாக தொடர்ந்தது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

எல்லை மீறிய இன்பம்
பகலும் இரவானது
சிந்தையில்லாமல் சிந்தி
சில்லரையும் கரைந்தது‌
நல்ல வேளை
யாரும் காணவில்லை

சின்ன வயசு
அழுது புலம்பும் அம்மா அப்பா
அசையா உடல் கண்டு
அதிர்ந்தது பலர் நெஞ்சம்

நல்ல வேளை
நான் அங்கு இல்லை!!
---------------------------------------
அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
WISH YOU ALL A HAPPY, HEALTHY & PROSPEROUS NEW YEAR!!


Posted on 4:05 PM

தேன்'நீ'

Filed Under () By SUFFIX at 4:05 PM


கழுகுப் பார்வை

முட்டி மோதியது
திட்டமிட்டே வட்டமிட்டது
வண்டின் கொடிய‌ அம்புகள்!!

காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!

அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!

வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!

பெயர்ந்தது பொழுதும்
குனிந்தது மலரும்
கணிந்தது பார்வை
வண்டது வென்றது
களிப்பினில் குளித்தது

மோக மேகம்
திரண்டது திரளாய்,
கணமழையில் இன்பம்
தேனாய் நனைந்த‌து!!

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)

Posted on 10:36 AM

அப் 'பூ'

Filed Under () By SUFFIX at 10:36 AM





தென்றலாய் வீசி
சில‌ க‌ணம்
வில‌கியும் விடாமல்
படரும்
விய‌ப்பு!!

க‌ண்க‌ளில் ப‌ட்ட‌
க‌ண‌ப் பொழுதினில்
மின்னி ம‌றைந்த‌தில்
ஏதோ
த‌விப்பு!!

சில்ல‌ரையாய்
வ‌ந்த செவ்வொலி
கேட்டு ச‌ட்டென‌
எங்கும்
சிலிர்ப்பு!!

க‌ண்டும் காணாம‌லும்
க‌ன‌வில‌ற‌ங்கி
குளிர்ச்சியாய்
பல‌
க‌ணிப்பு!!

தித்திக்கும் நினைவு
திக‌ட்டாத‌
இன்பத்தேண்
அதன்
இனிப்பு!!

ம‌ன‌த்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!

உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!

அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!

Posted on 12:45 PM

மற்றுமொரு மாயை

Filed Under () By SUFFIX at 12:45 PM



எண்ணங்களில் க‌ண்டு ம‌கிழ்ந்து
தேன்மொழிக‌ள் உண்டு களித்து
தேடுத‌லில் தீண்டி உணர்ந்து
காடு, க‌ட‌ல், ம‌லை க‌ட‌ந்து
காற்றில் வ‌ரும் அவ‌ள் சுவாச‌ம் நுக‌ர்ந்து
ர‌க‌சியமாய் அக‌ம‌கிழ்ந்து

சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து
அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!

இதோ,
மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
'அவள்' செய்த‌‌
‌ம‌ற்றுமொரு மாயையிது!!

Posted on 5:17 PM

<>எண்ண அலைகள்

Filed Under () By SUFFIX at 5:17 PM

மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!

கோடி வீடு
குழந்தைகள் குதூகலம்.
கூரையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!

கையில் கணிணி
கை நிறைய காசு
கற்றான் என்னவோ?
சுற்றுகிறான் ஊரெங்கும்!
கண்பட்டு பயனென்ன‌?
கல்லாதது என் குறை தான்!

கால்களை நான்‌ வ‌ருத்தி,
கடத்தியது போதுமடா,
காலமெல்லாம் தெருக்கடையில்
திகட்டியது என் வாழ்க்கை!

ப‌டித்தேன் ப‌ட்ட‌மெல்லாம்
ப‌ற‌ந்தேன் ஊரெல்லாம்,
உற‌வுகளை பார்ப்ப‌தோ
வ‌ருடமொரு முறை தான்!

ப‌ட்டாடை ப‌ல்லாயிர‌ம்
ப‌ல்லிளித்தாய் ப‌க‌ட்டைக்க‌ண்டு!
பாலாடைக்காணா ப‌சிவ‌யிறு,
பார்க்க‌ ம‌ற‌ந்த‌தேன்
ப‌க்க‌த்து வீட்டில்!

ப‌ழ‌குவ‌த‌ற்க்குள் பெற்ற‌ இன்பம்,
ப‌ழ‌ங்க‌தையாய் ஆக்கி வைத்தாய்,
தொலை நோக்கென வாதித்து
தொலைத்தாய் தொடங்கியதை!

எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள்
ஓடுது பார் அங்குமிங்கும்,
இருக்கும் அடுத்தோரை
ஆராய்வதை நிறுத்திவிடு!

களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!

Posted on 10:02 PM

<>இப்படிக்கு கவிதை

Filed Under () By SUFFIX at 10:02 PM



நறுக்கினார் போல் நாலே வரிகள்
நான்காயிரம் மொழிப்பெயர்ப்பு
நானூறு பொழிப்புரைப்பு
விவ‌ர‌மானோர் விவாதிக்க,
அற்றோரோ ஆமோதித்தர்!

கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்
வார்த்தை விளையாட்டாய்
விளையாடியது அவர் நாவால்

எதுகை மோனையாய் எடுத்துரைத்து
இசையோடு இழைத்து எனை
இனிதே இன்புற்றார்
பார்த்த‌லும், கேட்ட‌லும், ப‌கிர்த‌லும்
நாள் முழுதும் அவருட‌ன் நான்

மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்

அடுக்கடுக்காய் ஆயிர‌ம்பொய்
அத்தனையும் கவிதைத்தானாம்

க‌ய‌ல் விழிகளிரன்டை
க‌ளவாடினார் எனை வைத்து
காத‌ல் ம‌ழை பெயச்செய்தார்
க‌ருங்கூந்த‌ல் கார்மேக‌மாம்

சிதைத்தார் செவ்வித‌ழை
செந்தேனது,
புல‌வ‌ன் நானென்றார்
செம்மேனியாள் செய‌லிழந்தாள்
அங்கேயும் நானிருந்தேன்

காதலோ காமமோ
காத்திருப்பேன் க‌விதையாய்
கனக்கிலடங்கா கனா உனக்கு,
கட்டவிழ் நானி நிற்ப்பேன்

ந‌ங்கூர‌மாய் ந‌ம் ந‌ட்பு,
இருத்திவிடு
இரும்புச்ச‌ங்கிலியாய் எனை இனைத்து

வீரமும் தீரமும்
வெகுன்டெழட்டும் வைர வரிகளாய்
தடைகளை தகர்த்தெறி
எரிக்கட்டும் உன் எழுத்துக்கள்

...இப்ப‌டிக்கு க‌விதை



Posted on 3:33 PM

<>வெட்க்கிய காதல்

Filed Under () By SUFFIX at 3:33 PM


"காதல் மழைக்காக ஒதுங்கியவர்கள்
அக்னியாய் பார்வைகள் அனலாய் வீச
தடைகளை குடையேந்தி தகர்தெரிந்தவர்கள்"
பேசுவேனா வீரவசனம் ?

விரசமும், சரசமும் வெட்டவெளியில்
வெட்க்கித்தலை குனிகிரேன் மனம் வெதும்பி

வீதியில் விளம்பரம்..
விரகம்தான் விடயமோ
புனிதமான காதல் புடலங்காயோ
காசு கொடுத்தால் கிடைக்க கத்தரிக்காயோ
சுதந்திரமென சுலபமாய் சொல்வீர்கள்
சீரழிக்கும் சுதந்திரம் சுலபமாய் வந்தாலும்
அருவெறுப்பாய் இருக்கிறது, அறவே வேண்டாம்!!!


(அது 1999 இன்டெர்னெட் உபயோகப்படுத்த தொடங்கிய காலம், வழக்கம்போல் நன்பர்கள் சேட்டிங் அது இது என்று அறிமுகப்படுத்தினார்கள், ஆன்லனில் பல நல்ல‌ நன்பர்கள் கிடைத்ததும் உண்டு, ஏடா கூடமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்.. அப்படி ஒன்று நடந்திருந்தால், ஒரு சிறு கற்பனை)

அழுத்தினேன் அறை எண் மூன்று
அட‌டா, அறை முழுதும் அச‌த்த‌ல்கள்

குயில்களின் கூட்டம், மானோடு மயில்க‌ளும்தான்
பாப் அப்பாய் ஒரு பாப்பா, என்னை பார‌ப்பா என்றது

வ‌ய‌து, நிற‌ம், உய‌ர‌ம் இதுவும் வேண்டுமாம்
த‌ட்டிவிட்டேன் ஒரு என்ணை தந்திரமாய், ‌

அவ‌ளுக்கு வ‌ழ‌க்க‌ம்போல் ப‌தினெட்டேத்தானாம்
இத‌னிட‌யே இன்னொருத்தி இங்கே வா என்ற‌ழைத்தால்
ர‌க‌சியமாய் அவ‌ள் சொன்னால் ர‌ஷ்ய‌ப்பெண் தானென்று
ஒன்றா இர‌ன்டா இப்ப‌டியாய் ஒன்ப‌து பேர்

அமேரிக்கா, ஆப்பிரிக்கா இப்ப‌டி ப‌ல‌ க‌ன்ட‌ங்க‌ள்
சிந்தனை சிறகடித்தது சிகாகோ‌வுக்கும், சிங்கைக்கும்

சிறு இடைவெளியில் ஒன்பதில் ஒன்றைக்காணோம்
அடுத்த‌ சில‌ நொடிக‌ள், அறை முழுதும் வெருமை!!
தட‌ங்க‌ளுக்கு வ‌ருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்

Posted on 10:51 AM

<> 'ம்' என்றால்..

Filed Under () By SUFFIX at 10:51 AM


இதற்க்கு என் எதிர்க்கவிதை


கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான்
அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.

உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன்
கடலை கறியும் கடலாய் மாறியது!!

சில மணி நேரம் சீரியல், சினுங்கமாட்டோம்..
சீரியலால் நீங்கள் சினுங்காதவரை!
விளம்பர இடைவேளை..
மனதைத்திருப்ப மனமில்லை,
விழிகளையுமா?

அழகான புடவைத்தான் நேற்றுவரை
அடுப்பங்கரைக்கு போனது ‍அடுத்தாத்து அம்புஜத்தாள்


என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய்
இன்றைக்கு புதிராய் மொழிபெயர்த்து வைத்தாய்.


இறகு போல் குவ‌ளை, இருப‌து கிலோ ஆன‌து
நானும் புரிந்து கொன்டேன் 'நங்' ச‌த்தத்தால்


திட்டித்தீர்ப்ப‌து கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம்


மீட்ட‌ர் நீள‌ நெக்ல‌ஸ், முழ‌ங்கை வ‌ரை வ‌லைய‌ல்கள்
முன‌க‌ல் நிறக்க‌வில்லை, கடையை மாற்றனுமாம் இவள் பெயருக்கு!


உய‌ர்தினையும் அஃறினையும் மாறி மாறி மாற்றும்
'இந்த' இவ‌ளை மாற்றும் முய‌ற்சியில்.... இவ‌ன்

Posted on 10:17 AM

<>மின்னல்!!

Filed Under () By SUFFIX at 10:17 AM

மின்னல்...இருளடைந்த வானில்

சிதரும் வெளிர் வண்ண கோடுகள்,

சில கனமே தரிக்கும், பார்வையையும் பரிக்கும்
இம்மின்னலோ, மின்னலாய் தான் வந்தாள்,

மின்காந்தமாய் இழுத்தாள்!

பரித்தாள்... பார்வையோடு, மனதையும்தான்

இன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்

இனிதாய்த்தான் இருந்தது இவளிடம்!

காத‌ல் ம‌ழையால் ம‌ன‌தும் ந‌னைந்த‌து

ச‌காரா பாலை, பூஞ்சோலையான‌ மாயம்,

எண்ணம் முழுதும் வர்ணப்பூக்கள் ஜாலம்

அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்

ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!

Posted on 10:39 AM

<>அவள் விழிகள்

Filed Under () By SUFFIX at 10:39 AM

அவள் விழிகள்.....
பேசாமல் பேசும் பல மொழிகள்
ஆனந்தித்தின் பிரதிபலிப்பு
அகலமாய் சிரிக்கும் அழ‌கு விழிக‌ள்
காத‌லுட‌ன் க‌ல‌ந்து விட்டால்
மின்மினியாய் சிமிட்டும் அந்த‌ க‌ய‌ல் விழிக‌ள்
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிக‌ள்
தேடிய‌து கிடைத்தது க‌ன‌ம‌ழையாய் அவ‌ள் விழிக‌ள்
உற்சாக‌த்தின் உச்சி,
எவ்ரெஸ்ட்டாய் குளிரும் குமுதவிழிகள்
வெறுத்து வெகுன்டெழுந்தாள் அக்னியாய் அவ்விழிகள்
அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
(ஒரு சிறு முயற்சி...அக்னி லுக் விடாமே, ஆர்க்டிக்கா மாறி பின்னூட்டங்களை அள்ளி போடுங்க‌)

Posted on 11:52 AM

<>திருமணம்

Filed Under () By SUFFIX at 11:52 AM


இவை இரன்டும், சற்றுமுன் தோன்றியவைகள், பல பதிவுகளை படித்ததன் விளைவுன்னு நினைக்கிரேன்...சிறு பிள்ளைத்தனமா இருந்தால் சான்றோர்கள் மன்னிப்பார்களாக...(போதும் பில்டப்)


என்ன தலைப்பு வைக்க்லாம்னு தெரியவில்லை

(திருமணம் அல்லது மனைவி)


கண்டவுடன் காதல்....இது பொய்.

கண்டவளை வென்றவுடன் காதல்...இதுவே மெய்.

--------------------------------------
அவள்...வாழ்க்கை துணை
வாழ்வில் வ‌ழுக்கும்பொழுதும் துணை
வாழ்வின் வளத்திலும் துணை
நான் வ‌ழுக்கையானாலும் துணை
எனை இந்த பூமி விழுங்கும்போதும்...அவளே

-------------------------------------