|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 12:30 PM

தீர்வு

Filed Under () By SUFFIX at 12:30 PM


சின்ன வயசு
சிகரெட் ஆசை
சிறிதாய் சீண்ட‌
சுலபமாய் பற்றியது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

மதுப் பழக்கம்
மதி மயக்குமாமே
மெதுவாய்‌ தீண்ட‌
அதுவாக தொடர்ந்தது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

எல்லை மீறிய இன்பம்
பகலும் இரவானது
சிந்தையில்லாமல் சிந்தி
சில்லரையும் கரைந்தது‌
நல்ல வேளை
யாரும் காணவில்லை

சின்ன வயசு
அழுது புலம்பும் அம்மா அப்பா
அசையா உடல் கண்டு
அதிர்ந்தது பலர் நெஞ்சம்

நல்ல வேளை
நான் அங்கு இல்லை!!
---------------------------------------
அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
WISH YOU ALL A HAPPY, HEALTHY & PROSPEROUS NEW YEAR!!


Posted on 4:05 PM

தேன்'நீ'

Filed Under () By SUFFIX at 4:05 PM


கழுகுப் பார்வை

முட்டி மோதியது
திட்டமிட்டே வட்டமிட்டது
வண்டின் கொடிய‌ அம்புகள்!!

காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!

அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!

வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!

பெயர்ந்தது பொழுதும்
குனிந்தது மலரும்
கணிந்தது பார்வை
வண்டது வென்றது
களிப்பினில் குளித்தது

மோக மேகம்
திரண்டது திரளாய்,
கணமழையில் இன்பம்
தேனாய் நனைந்த‌து!!

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)

சுழலும் வீடு

இது ஒரு புது மாதிரியான வீடு, ஆஸ்திரேலியாவில், வின்காம், பகுதியில் இந்த சுழலும் வீடு புதுசா கட்டியிருக்காங்க. சூரியன் எந்த திசையில போகுதோ, அந்த ப்க்கம் கூடுதலா வெளிச்சம் கிடைக்கிறதுக்காக இப்ப்டி வடிவமைச்சு இருக்காங்க, பல லட்சம் டாலர்கள் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்காங்க, இதுல குடியிருக்கிற ஜோடி (பிங்க்கி & பாங்க்கின்னு வச்சுக்கலாம்), ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்காம். நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். ஆனா இந்த தெருவுக்கு வருகிற போஸ்ட்மேன், பால் கொண்டு வருகிறவங்களுக்கு வாசல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கிறது குழப்பமா இருக்கும். (Reference : www.greendiary.com)


சிக்னல் சிக்கல்

எங்க அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது ஒரு சிக்னல் இருக்கு, சில மாதங்களுக்கு முன் அதுல கவுன்ட்டிங் முறை, அதாவது சிவப்பு நிறம் வந்தா 90 வினாடிகளும், பச்சை நிறம் மாறும் போது 30 வினாடிகளும் இருக்கும், சிறிது நாட்களாக பச்சை நிறம் மாறினால் அது 01 லேயே நிக்கும், நாம பாட்டுக்கு இப்ப மாறுமோ, அப்போ மாறுமோன்னு வண்டிய உருட்டிக்கொண்டு போகணும். ஆனா நேற்றிலிருந்து பாருங்க சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து எரிவதால் இன்னும் பிரச்ணை கூடுதலா ஆயிடுடச்சு. ஒரே டென்ஜன்...


வருடம் 2010

இன்னும் இரண்டு வாரத்தில் புது வருடம் 2010 பிறக்கபோகுது, அதை இரண்டாயிரத்து பத்துன்னு (Two thousand and ten))சொல்வதா இருபது (Twenty Ten))பத்துன்னு சொல்வதான்னு ஒரு சர்ச்சை பல நாடுகளில் கிளம்பி இருக்கு, யாருப்பா அது, கொண்டு வாங்க சொம்பையும், ஜமுக்காலத்தையும், கூட்டுங்கடா பஞ்சாயத்தை, நீங்க எப்புடி வேணும்னாலும் சொல்லுங்க ஆனா அமைதியா அடிச்சுக்காம எங்கள வாழ விட்டா சரி.

Posted on 8:00 AM

மன நிறைவு

Filed Under () By SUFFIX at 8:00 AM

Picture source : http://www.designofsignage.com

இன்று எப்படியாவது இந்த பணத்தை கட்டிவிட வேண்டும், இரண்டு நாட்களாக‌ முயன்றும் இந்தப் பக்கம் வரமுடியவில்லை, இன்றைக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியாச்சு, முடித்துவிடலாம்.

வங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள் வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு மூடிடுவாங்களாம்.

அப்போது ஒரு பெரியவர், கையில் மஞ்சல் பையுடன், உள்ளே நுழைந்தார், வரிசையின் நீளத்தைக் கண்டு அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது, பார்வை அங்கேயும், இங்கேயும் ஓடியது, நான் அவரை கூர்ந்து கவனித்ததாலோ என்னவோ, அவர் நேராக என்னிடம் வந்து, ஏதோ சொல்ல எத்தனித்தார், அதற்க்குள், வரிசையின் கடைசியிலிருந்து "அய்யா பெரியவரே, இங்கே இப்படி வந்து நில்லுங்க, நாங்களும் வேலை, வெட்டிய விட்டுட்டுதான் வந்திருக்கோம்", பெரியவர் என்னிடம், தம்பி, இந்த பணத்தை இன்னைக்குள்ள கட்டணும், இல்லாட்டி வட்டி போட்டுருவாங்க, கூட்டமும் அதிகமா இருக்கு, கவுன்ட்டரும் சீக்கிரம் மூடிருவாங்க போல, கொஞ்சம் உதவி செய்வீங்களா?, உதவி செய்தே ஆகவேண்டுமென தோன்றியது "சரி அய்யா, நீங்க அங்கே போய் உட்காருங்க, நான் பணத்தை கட்டிடுறேன்" எனக்கு பின்னாடி இருந்தவர், "ஹலோ, நீங்க பாட்டுக்கு வர்ரவங்க கிட்டே இப்படி சர்வீஸ் செஞ்சுக்கிட்டே இருந்தா நாங்க எப்போ வேலைய முடிக்கிறதாம், உங்க சமூக சேவையை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு உங்க வேலய மட்டும் பார்த்துட்டு போங்க சார்".

வட்டி ஒரு நச்சு, உயிர்க்கொல்லி, ஏன் இந்தப் பெரியவர் தனது பணத்தை அவசியில்லாமல் ஒரு நாள் தாமத்திற்காக இழக்க வேண்டும், நான் இழப்பதோ அரை மணி நேரந்தான், சில வினாடிகள் சிந்தனை ஓடியது, "அய்யா இப்படி வந்து என்னோட இடத்தில் நில்லுங்க, எனக்கு அவசரமா பணம் கட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை, நான் நாளைக்கு கூட வந்து கட்டிக்குவேன், நீங்க அமைதியா நின்னு உங்க பணத்தைக் கட்டிட்டு போங்க". அவரை அங்கே நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியில் அங்கிருந்து அலுவலகம் திரும்பினேன்.

மணி 5 ஆகி விட்டது, இன்றைக்கு புதிய பதிவுலக நண்பர் ரமேஷ் தனது வீட்டிற்க்கு அழைத்திருந்தார், 6 மணிக்கு அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தது, என்னைவிட மூன்று வருடங்கள் மூத்த்வர், நல்ல பண்பான மனிதர்.

சொன்ன சமயத்திற்க்குள் ரமேஷ் வீட்டை அடைந்து விட்டேன், அழைப்பு மணி அடித்து, கதவை திறந்ததும் ஆச்சர்யம், வங்கியில் சந்தித்த அந்தப் பெரியவர் ரமேஷ் வீட்டில்,
"அய்யா நீங்களா?",
"அட வாங்க தம்பி, உள்ளே வாங்க, நாம் இவ்ளோ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை",
அப்போ ரமேஷ்?,
"அவன் என்னோட பையன் தான், உங்களுக்கு அவன தெரியுமா?",
"ஏம்மா இங்க வா யாரு வந்திருக்காங்க பாரு",
"இப்படி உக்காருங்க தம்பி", பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.
"இவருதான் பேங்க்கில இன்னக்கி உதவி செய்தவர்மா"

"அப்படியாப்பா, உங்கள பத்தி தான் இன்னக்கி முழுசும் பேசிக்கிட்டு இருக்கார்"

"எங்கே ரமேஷ், அவன் இன்னுமா குளிக்கிறான்", அதற்க்குள் ரமேஷ் வந்து விட்டார்,

"டேய் ரமேஷ், இவரு உன்னோட ப்ரென்டா, இவரு தாம்ப்பா இன்னக்கி பேங்க்கில் ஹெல்ப் பண்ணியது"


"ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், அந்த நல்லவன் நீ தானா, நீ மட்டும் ஹெல்ப் பண்ண்லைனா ஆறாயிரம் ரூபாய் தண்டத்திற்க்கு வட்டி கட்டியிருப்போம்".


நான் செய்த அரைமணி நேர தியாகத்திற்கு இத்தனை விளைவுகளா, இவ்வளவு பாராட்டா? நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா? கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
எனது இந்த ஐம்பதாவது இடுகையை எனது அன்பான வலையுலக நண்பர்களுக்கு சமர்ப்பிப்பதில் மன நிறைவுடன் மன மகிழ்வும் அடைகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மழையால் ஏற்பட்ட வெள்ளம், அதனைத் தொடர்ந்து வானம் தினமும் 2012 படக்காட்சி போல மிரட்டிக் கொண்டு இருந்தது. இன்றைக்கு தான் வானம் தெளிவாக இருந்தது. இந்தப் படங்கள் எங்கள் அலுவலகத்தின் பத்தாவது மாடியிலிருந்து எடுத்தது.

வானம் 10.12.2009


வானம் 08.12.2009







சென்ற வாரம் சென்னைக்கு ஒரு துரிதப் பயணம், இது வரை சவூதியா அல்லது எமிரேட்ஸில் தான் பயணிப்பது வழக்கம், முதன் முறையாக சிரிலங்க்கன் ஏர்லைன்ஸில் செல்லலாம் என டிக்க்ட் போட்டாச்சு, அதாவது கொழும்பு வழியாக சென்னைக்கு செல்லும். விமானம் மாலை எட்டு மணிக்கு புறப்பட வேண்டும், ஏதோ மின்சாரக் கோளாறாம், ஒரு மணி நேரத்தில் சரியாகி விடும்னு சொன்னாங்க, முன்பு எமிரேட்ஸினால் நிறுவகிக்கப்பட்டது, அப்போ நன்றாக இருந்ததுன்னு இப்போ இப்படி ஆயிடுச்சேன்னு சக பயணிகள் புலம்பித்தள்ளினார்கள், இது போன்று கோளாறுகளுக்கு சரியான Planned Maintenance இல்லைன்னு நினைக்கிறேன்.

மணி 11ம் ஆச்சு, சரியான பசி, ஏர்போர்ட்டில் இருக்கு ரெஸ்டாரன்ட்டில் ஒரு வெஜிடபில் பஃப்ஸ் 8 ரியாலுக்கும், ஒரு டீ 12 ரியாலுக்கும் வயிறு எரிய குடித்தோம், அந்த பாழாபோன டீக்கு எதுக்கு 12 ரியால் (கிட்டத்தட்ட 150 ரூபாய்) கொடுத்தோம்னு எனக்கு இன்னைவரை புரியலைங்க. பத்து நிமிடம் கழிச்சு ஒரு ஆள் வந்து விமான் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம், அதனால எல்லோருக்கும் டின்னர் கூப்பன் கொடுக்கப்போறோம்னு சொன்னாங்க, அடப்பாவிகளா இத கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னா என்னாங்கடா, சும்மா வந்த கூப்பனை ஏன் விடனும்னு அதையும் வாங்கி லபக்கியது சொல்லனுமா என்ன?.

நள்ளிரவு ஒரு மணிக்கு விமானத்தில் ஏறி உட்கார்ந்தாச்சு, விமானத்தில் உள்ளே நுழையும்போது, அயூபவன், அயூபவன்னு அந்தப் பெண் சாவி கொடுத்த பொம்மையைப் போல‌ ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி வணக்கம் சொலவது, எனக்கு என்னவோ தேவையில்லாத ஒரு சடங்காக தோண்றியது. கேப்டன் Ready for take offனு சொல்லிட்டு, தாமத்திற்க்கு மன்னிக்கவும், IATA விதிப்படி, விமான ஓட்டியும் சிப்பந்திகளும் ஒரு சில மணி நேரத்திற்க்கு அதிகமாக வேலையில் அமர்த்தக்கூடாதாம், அதனால் உங்களை குவைத்திற்க்கு அழைத்துச் செல்கிறோம்னு, அங்கிருந்து வேறு ஒரு க்ரூப் இந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்னு ஒரு குண்டை போட்டாங்க, சில பேர் இங்கேயே விமானத்தை நிறுத்து நாங்க இறங்கிடுறோம்னு ஒரே சத்தம், இதற்க்கிடையே விமானம் 18,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.

விமானம் அதிகாலை 4 மணியளவில் குவைத் சென்றடந்தது, கேப்டன் மறுபடியும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டார், அதாவது ஒரு சிறு மணித்துளிகளில் விமானம் புறப்படும், சரி எத்தனை மணிக்குப்பா புறப்படும், கீழே இறங்கி கொஞ்ச நேரம் காத்திருங்க, நாங்க அறிவிப்போம்னு சொன்னாங்க, எல்லொரும் முனுமுனுத்துக் கொண்டே இறங்கியவுடன், எல்லோருக்கும் ஹோட்டல் தங்குவதற்க்கு கூப்பன் கொடுத்தாங்க, இது எதுக்குப்பா, அப்பொத்தான் சொன்னங்க விமானம் 11 மணிக்குதான் புறப்படுமாம், எனக்கு என்னச் செய்வதன்றேன் புரியவில்லை, செல்வதோ ஒரு வாரப் பயணம் இதில் ஒரு நாள் வீணாகி விட்டதேன்னு வருத்ததுடன் கோபம், எதுவா இருந்தாலும் ஏர்லங்க்கா தலைமையகத்திற்க்கு கம்ப்ளெய்ன்ட்டு பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க, அதுவும் சரியே, பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். விமான நிலையத்திலேயே இருந்தது அந்த ஹோட்டல், அறைக்கு எதிரிலேயே விமானங்கள் அங்கங்கே நிறுத்தி வைத்தது இருந்தார்கள், லைசன்ஸ் இருந்தால் அதனை எடுத்துக்கிட்டு பறந்திடலாம்னு தோண்றியது.

(ஹோட்டல் அறைக்குமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம்)

சரியாக 11:30 மணிக்கு குவைத்திலிருந்து விமானம் புறப்பட்டது, அறிவிக்கும்போது 39,000 அடி உயரத்தில் பறக்கும்னு சொன்னாங்க, ஆனா ஒரு சில நிமிடங்களே அந்த உயரத்தை தக்க வைக்க முடிந்தது, தடாலென 28,000 அடியிலேயே ஓட்டினார்கள், இன்ஜின் திறம் அவ்வளவு தான் போல, அதனால் வேகமும் குறைவாகவே இருந்தது, மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டரே செல்ல முடிந்தது, இதுவே எமிரேடஸாக இருந்தால் வேகத்தை நிச்சயமாக கூட்டி இருப்பார்கள்.

ஏர்லன்ன்காவின் ஸ்பெஷல் மதுவினை அந்த மாதுக்கள் அளவில்லாமல் ஊற்றிக் கொடுப்பது தானாம், எனக்கு பிடிக்காத விடயம், எனக்கு அருகில் இருந்த சக பயண நண்பர் டாக்டர். ராமச்சந்திரன் குடிக்கும் பழக்கம் இல்லாதவர், அதனால் சற்று நிம்மதி, அவரே ஆச்சரயப்பட்டார், "என்னங்க நம்ம மக்கள் இப்படி தண்ணியில நீந்துறாங்க". அதைவிட கொடுமை பாட்டில் பாட்டிலாக விமானத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு விலைக்கு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தான் சீரழிவது மாத்திரமல்லாமல் தனது குடும்பம், நண்பர்களையும் இப்படி அழிக்கிறார்களேன்னு என்னோடு சேர்ந்து ராமச்சந்திரனும் வருத்தப்பட்டார்.

இதற்க்கிடையே எனக்கு பின்னால் இருந்த ஒருவர், தனது கைப்பேசியை குடைந்து கொண்டு இருந்தார், அங்கே வந்த ஏர்ஹோஸ்டஸ் தயவு செய்த ஸ்விட்ச ஆஃப் செய்யுங்கள் என்றார், அவர் இல்லை நான் பிளைட் மோட்ல (Flight mode) தான் வச்சிருக்கேன், இதில எனக்குப் பிடித்த பாட்டுக்கள் இருக்கு அதைத்தான் நான் கேட்கிறேன், அதனால் ஒரு பாதகமும் இல்லைன்னு சொல்ல, உடனே அந்தப் பெண் தனது சூப்பர்வைசரை அழைத்து வந்து, ஒரு வழியாக விவாதித்து அவர் வாயையும், கைப்பேசியையும் மூடி விட்டுச் சென்றனர்.

மாலை 6 மணிக்கு கொழும்பு சென்றைடைந்தது, பச்சைப் பசேலன அருமையான ஊர், விமான நிலையத்தின் அமைப்பு துபாய் விமான நிலையத்தினைப் போலவே இருந்தது, ஒரே ஆள் தான் கட்டியிருப்பாரோ? ரொம்ப யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை, சென்னைக்கு விமானம் புறப்படத்தயார இருக்கு உடனே போங்கன்னு விரட்ட,
வேகமாக ஓடி துண்டை போட்டாச்சு, பாவம் திருச்சிக்காரங்க, அவங்களுக்கான இணைப்பு விமானம் அடுத்த நாள் தானாம், அதனால் அவ்ங்க மறுபடியும் கொழும்பில் ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம். எத்தனை உறவினர்கள் அங்கே விமான நிலையத்தில் இவர்களின் வருகைக்காக‌ காத்து கிடக்கிறார்களோ.

விமானம் சென்னை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படது, ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு, அவர் அறிவிப்பு செய்த விதம் அருமையா இருந்ததது, அதாவது விமானம் நகர்ந்து 15 நிமிடம் வரைக்கும், அது போல தரையிறங்கும் முன் 15 நிமிடம் வரைக்கும் தங்களது கைப்பேசிகளை அமர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார், இது விளக்கமான அறிவிப்பு, முன்னர் குவைத் - கொழும்பு பயணத்தில் நடந்த விவாதம் தேவையில்லாதது எனப் புரிந்தது. ஆமா நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.

ஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு 10:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. நமது விமான நிலையத்தில் இருக்கும் ஏர்போர்ட் டேக்ஸி வசதி பாராட்ட்க்கூடியதே, வீட்டிலிருக்கும் யாருக்கும் தொந்தரவு தராமல், அங்கிருந்து மந்தைவெளிக்கு ரூ.450 கொடுத்தால், நல்ல தரமான குவாலிஸ் அல்லது சவேரா ஏ.ஸி. வண்டியில், அழகான முறையில் வீட்டுல கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். அப்பாடா வந்து சேர்ந்தாச்சுப்பா!!

எவ்வளவுதான் வசதியான் நாட்டில் வாழ்ந்தாலும் நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours!! இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே!! அது மருத்துவ வசதியாக இருக்கட்டும், குழந்தைகளின் படிப்பாகட்டும், அவர்களுக்குத் தேவையான பயனுள்ள புத்தகங்களாகட்டும், இந்த துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மைலாப்பூர் குளத்தை சுற்றி இருக்கும் கடைகளை ஒரு வலம் வந்தால் போதும் சவூதியில் கிடைக்காத அனைத்து பொருளும் விலை மலிவாகவும், தரமானதாகவும் வாங்கி விடலாம். (கோணார் நோட்ஸோ, பட்டுப்புடவையோ, கெட்டி உருண்டையோ - everything available).

அதிர்ஷ்டவசமாக சென்னையிலிருந்து திரும்பிய பயணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நன்றாகவே இருந்ததது, ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும், சிரிலங்க்கா விமானத்தில் கொடுக்கும் சாப்பாடு நமதூர் சாப்பாட்டைப்போல காரசாரமாக சுவையாகவே இருந்ததது, அதுக்காக எக்ஸ்டரா மீல்ஸா கேட்க முடியும்!!

வாங்க வாங்க வரிசையில ஒழுங்கா நின்னு உங்களோட அனுமதிச் சீட்டை வாங்கிக்கோங்க, 2012ல் முதல் முறையா வானவெளியில் வர்த்தகரீதியான புதுசா ஒரு விடுதியை தொடங்கப் போறாங்க. Galactic Suite அப்படிங்கிற ஒரு நிறுவனம் நம்மள மாதிரி ஆர்வம் உள்ளவங்க எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம். இங்கேயிருந்து மேல போக இரண்டு நாட்களாகுமாம், அதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் 8 வாரத்துக்கு உண்டு இல்லைன்னு பண்றமாதிரி பயிற்சி கொடுக்கிறதுக்காக கரீபியன் தீவுக்கு கூட்டிட்டு போவாங்களாம்.
இந்த விடுதியில இருந்துக்கிட்டே 80 நிமிடத்திற்கு ஒரு முறை உலகத்தை சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருக்கலாம். இது வரை 43 பேர் இதுல பயணிக்க தங்களோட் பெயரை பதிவு செஞ்சு இருக்காங்க. சரி எவ்ளோப்பா செலவு ஆகும்? மூன்று நாளைக்கு 4.5 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவாகும், மூனு நாள் வேணாம், ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க இஷடத்துக்கு போய் வர? ஆனாலும் பாருங்க மூனு நாளைக்கு சிறைல அடச்சு வச்ச மாதிரி எப்படித்தான் இருக்கப் போறாங்களோ, அதுனால இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராது, நீங்க போய்ட்டு வந்து உங்க பதிவுல ஒரு இடுகை போடுங்க, நாங்க வந்து கும்மி அடிப்போம்.






பூமியை நீங்க இப்படி படுத்துக்கிட்டே ரசிப்பீர்கள்!!



பதிவுலக நண்பர் மாதவராஜ் துவக்கி வைத்து, உலகமெங்கும் சுற்றும் இந்த தொடர் பதிவில் என்னையும் மாட்டி விட்ட நவாஸ் அவர்களுக்கு நன்றி, இதோட விதிமுறைகள் இப்போ எல்லோருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல்

பிடித்த‌வ‌ர்க‌ள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)

பிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு

2. எழுத்து :

பிடித்தவர்கள்: சுஜாதா, பாலகுமாரன் (கல்லூரி நாட்களில் நிறைய படித்ததுண்டு)

பிடிக்காதவர்: அப்படின்னு சொல்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க

3.திரைப்பட பாடலாசிரியர்கள்:

பிடித்தவர்கள் : வைரமுத்து (எப்போதும்), டி. ராஜேந்தர் (அப்போது)பிடிக்காதவர் : குத்துப்பாடல்கள் எழுதும் யாவரும்

4.நகைச்சுவை நடிகர்

பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி

5. நடிகர்

பிடித்தவர்: கமல்
பிடிக்காதவர்: சிம்பு

6. நடிகை

பிடித்தவர் : நதியா (அப்போது)
பிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே

7.தொழில் அதிபர்க‌ள்
பிடித்தவர்கள்: இரா. க. சந்திரமோகன் (அருன் ஐஸ் கிரீம்ஸ்), முகமது மீரான் (ரேனால்ட்ஸ் பேணா) உழைப்பாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்தவர்கள்

பிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுர‌ண்டுப‌வ‌ர்க‌ள்


8. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க‌


9. பதிவுலகம்
பிடித்தது: புதிய‌வ‌ர்க‌ள், புதுமைக‌ள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.
பிடிக்காதது: அவசியமில்லாத தனிமனித‌ தாக்குதல்கள், தேவையில்லாத‌ விவாதங்கள்


10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்


ஊர் வழக்கப்படி இதை விட கலக்கலா பதிவினை தொடரும்படி நல்ல நண்பர்கள் சிலரை அழைக்கணுமாம்.

நான் அழைக்கப்போவது:

அன்பின் அண்ணன் இராகவன் நைஜீரியா

சமையலை பிடிபிடின்னு பிடிக்கும் ஜலீலா அக்கா
கோவச்சுக்காம பதிலளியுங்க ப்ளீஸ்.........

Posted on 8:47 PM

ஜித்தா நீருற்று (Jeddah Fountain)

Filed Under () By SUFFIX at 8:47 PM


ஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - ‍சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:

உலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

சக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.

மணிக்கு 375 கிலோமீட்டர் வேகத்தில், வினாடிக்கு 1,250 லிட்டர் நீர் வெளியேறுகிறதாம். தரையிலிருந்து புறப்பட்டு நீர் அதிகபட்ச உயரம் வரை செல்லும் நீரின் எடை 18 டன்கள். இரவு நேரங்களில் ஒளியூட்ட 500 சக்தி வாய்ந்த மிண் விளக்குகள் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நீரூற்று, 1985ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு,இது வரை எந்த ஒரு பிரச்ணைகளும் இல்லையாம், வருடா வருடம் ஒரு முறை Planned Shutdownக்காக நிறுத்தி வைக்கபடுமாம்.

இந்த நீரூற்று கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்று இருக்காம்.

அப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது இந்த ஃபவுன்ட்டெயின், அப்போ நான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தால் சரி!!




ஆமா, நாம எல்லோரும் எறும்பு மாதிரி இருக்கணுமாம், குறுகுறு..துறுதுறுன்னு, இதை நான் சொல்லலை, பிரபல எறும்பியல் வல்லுணர் சொன்னதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். பாருங்க ஒருத்தர் எறும்பு பின்னாடியே போய் அதுக என்ன செய்யுதுன்னு பார்த்து, அதை எல்லாம் நமக்கு விளக்கமா சொல்லி இருக்கிறார். எறும்புங்களுக்கு நான்கு வகையான அபார குணம் இருக்காம். முதலாவது, அதுங்க எல்லாம் மேல ஏறும், கீழ இறங்கும், அப்படி போவும், இப்படி போவும், ஆமா, அது எங்க போகனும்னு நினைச்சுதோ அங்கே போயே தீரும், வச்ச குறி தப்பாது.

இரண்டாவது அதுங்க என்ன செய்யும்னா, கோடை காலத்தில குளிர் காலத்த்ற்க்கான‌ தயாரிப்புகள செய்யும், ஆமா எப்படியோ கோடை முடிஞ்சுறும், அப்புறம் குளிர் காலத்தில அவ்ளோ சுலபமா வெளிய போய் சுற்றித் திரிந்து சாப்பிட முடியாது, அதனால அதுங்க முன் கூட்டியே ரொம்ப சமத்தா யோசிச்சு குளிர் காலத்துக்காக தயார் ஆயிடுமாம்.

மூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம், அட எங்கே தான் இருக்கோ மூளை இதுங்களுக்கு, இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்குதய்யா!! இம்பூட்டு பெரிய மூளைய வச்சு நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கிங்க‌ளா? சரி, விஷயத்துக்கு வருவோம், ஆமாங்க, இந்த குளிர் காலம் சீக்கிரம் முடிஞ்சிடும்,அதனால் உள்ளேயே முடங்கி கிடக்காம, அப்ப்போ வெளிய வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போவுமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சா, குளிர் குறஞ்சி இருக்கான்னு ஆய்வு செஞ்சுக்கிட்டே இருக்குமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சது நம்மளுக்கு தெரியுதோ இல்லையோ, நம்ம எறும்புக்கு தெரிஞ்சு, தூங்க்கிட்டு இருக்கிற நம்ம பயபுல்லைங்க காலர்ல இழைஞ்சு வந்து எழுப்பிடும். அவ்ளோ உஷார்!!

நாலாவதும், முக்கியமானதும், இதையாவது கவனமா படிங்க, கோடை காலத்தில் எவ்ளோதான் அதுங்க சேர்த்து வைக்கும்? "எவ்ளோ கூடுதுலா முடியுமோ அவ்ளோ" ஆமா "All that possible they can".

பாருங்க ஒரு சின்ன எறும்பு சின்ன மூளைய வச்சு என்னனென்ன டகாலகடி வேலையெல்லாம் செய்யுது. நீங்க என்ன செய்யப் போறீங்க, ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு!!


டிஸ்கி : NEVER GIVE UP, LOOK AHEAD, STAY POSITIVE AND DO ALL YOU CAN!!


Posted on 10:36 AM

அப் 'பூ'

Filed Under () By SUFFIX at 10:36 AM





தென்றலாய் வீசி
சில‌ க‌ணம்
வில‌கியும் விடாமல்
படரும்
விய‌ப்பு!!

க‌ண்க‌ளில் ப‌ட்ட‌
க‌ண‌ப் பொழுதினில்
மின்னி ம‌றைந்த‌தில்
ஏதோ
த‌விப்பு!!

சில்ல‌ரையாய்
வ‌ந்த செவ்வொலி
கேட்டு ச‌ட்டென‌
எங்கும்
சிலிர்ப்பு!!

க‌ண்டும் காணாம‌லும்
க‌ன‌வில‌ற‌ங்கி
குளிர்ச்சியாய்
பல‌
க‌ணிப்பு!!

தித்திக்கும் நினைவு
திக‌ட்டாத‌
இன்பத்தேண்
அதன்
இனிப்பு!!

ம‌ன‌த்தோப்பில் மணங்கமழ்ந்து
ஊஞ்சலாடி
தினமும்
களிப்பு!!

உவகையில் உண்டு
உயிரினில் கவிதையாய்
என்றும்
பிறப்பு!!

அப்பூ, எப்பூ
ஆனந்தம்
எந்தன்
ஆவாரம் 'பூ'!!


இந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா? அப்படின்னா இத படிக்காதீங்க!!
--------------------------------------------------


  • நீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
  • ஏதாச்சும் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்!!
  • நீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.
  • நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு!!
  • நீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா? ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.
  • பாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.

  • நீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.

  • நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!


  • நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.

  • நீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.

சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?, வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:

  • வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).

  • எதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).

  • தலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).

  • தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).

  • நான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).

  • தனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள‌ உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).

  • ஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பணியினைச் செய்வார் (Appreciation).

  • திறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).

  • த‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொறுப்புக்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து, அவ‌ர்க‌ளின் ஒத்துழைப்பின் அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ வேண்டும் (Share the goals).

  • சலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).

ஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு‌. GOOD LUCK!!

மூன்று நாளைக்கு முன்னாடி, கேஸ் சிலின்டருக்கு வீல் உள்ள ஸ்டான்டு வாஙகனும்னு என் மேல இறக்கப்பட்டு தங்கமணி சொல்ல, (ஆமாங்க இல்லாட்டி ஹாலில் இருந்து, கிச்சன் வரை உருட்டியோ, தள்ளியோ கொண்டு போய் வைக்கனும், குடும்பத்தலைவன்னா சும்மாவா), ஒரு கடைக்கு போய் அவங்களே வாங்கி வந்துட்டாங்க, கடைல இரண்டு விதமான‌ ஸ்டான்ட் வச்சு இருந்தாங்களாம், வழக்கம்போல எது விலை கூடுதலோ அதையே வாங்கியாச்சு, விலை கூடுதலா இருந்தா தரமும் கூடுதலா இருக்குமாமே? ஸ்டான்டுல வீல் இருக்குன்னு சொன்னவுடன், அதுக்கு கியர் இருக்கா, பிரேக் இருக்கா, மைலேஜ் எவ்வளவு, இது மாதிரி குசும்புத்தனமாவெல்லாம் கேட்கக்கூடாது.

வீட்டிற்க்கு வ‌ந்து ச‌ந்தோஷ‌த்தில் சிலின்ட‌ர‌ தூக்கி ஸ்டான்டு மேல‌ வ‌ச்ச‌துதான் தாம‌த‌ம், "கிளிக்கு" "க‌ட‌க்" ச‌த்த‌ம், ஒரு ப‌க்க‌ம் வெல்டிங் உடைஞ்சிடுச்சு, அட‌க் கொடுமையே!!

உடனே நம்மளோட அலப்பரைய தொடங்கியாச்சு, வாய்ப்ப விடுவோமா, இது மாதிரி கூடுதல் டெக்னிக்கான மேட்டருக்கு என்னோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் செலக்ட செஞ்சே, உலோகத்தில‌ எத்தனை குவாலிட்டி இருக்கு, அவங்க என்ன உலோகத்தில‌ இத செஞ்சாங்களோ, என்ன முறையில வெல்டிங் வச்சாங்களோ, ஒரு வழியா ஓவரா பில்டப் கொடுத்து, ஒரு ஸீன் போட்டாச்சுல்ல.

சரி இப்போ என்ன செய்வது, கடையில திருப்பி கொடுத்திட வேண்டியதுதான். அடுத்த நாள் அவங்க கொடுத்த அதே பையில் போட்டு, கொண்டு போய் கொடுத்து, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியாச்சு, கடைக்காரரோ அதல்லாம் முடியாது, நீங்க கண்டபடி இழுத்துருப்பிங்க அதனால தான் உடஞ்சிடுச்சு, விடுவோமா ஸ்டாண்டோட வீல பாருங்க, அதுல ஏதாச்சும் அழுக்கு இருக்கா, நாங்க இழுத்து இருந்தா அது அழுக்கா இருக்கும்ல (அடடா என்ன ஒரு வேலிட் பாயின்ட்!!). கடைசியா, வழிக்கு வந்து, நான் இங்கே வேலை செய்கிறவன் தான், முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சு வருவார், அப்பொ வந்து பேசுங்கன்னார், இதுக்காக வந்து அலைஞ்சுக்கிட்டெல்லாம் இருக்க முடியாதுங்க‌, நீங்களே அவரிடம் எடுத்து சொல்லுங்க, நான் நாளைக்கு வருகிறேன், அப்படியும் அவர் மாற்றித் தர மறுத்தால், அவருக்கு கஸ்டமர் பற்றி அக்கறையில்லை, என்னை மாதிரி நல்ல கஸ்டமர இழக்க நேரிடும்னு சொல்லுங்க!!

அடுத்த நாள் வீட்டிலிருந்து போகும்போதே, என்ன வசனம் பேசுவது, பிரபல பதிவரா வேறு இருக்கோம், மரியாதைய காப்பாத்திக்கணும், இப்படி பல‌ எண்ண் ஓட்டங்கள், ஒரு வழியா கடைக்கு வந்து, "சிலின்டர் வீலு எந்த ஆயி?" ஆங்..சாரே, புதிய ஸ்டான்டு, அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!!
அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!

டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!!



அப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று சிந்திப்போமே!!


  1. வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.

  2. எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.

  3. மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.

  4. புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.

  5. தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.

  6. கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.

  7. வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.

  8. காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.

  9. நேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம்!! பணப்புழக்கம் காரணமோ? அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.

  10. பிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல்? நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த சகோதரிகள் திருமதி. பாய்ஜா அவர்களுக்கும், ஜலீலா அவர்களுக்கும் நன்றி, இதோ தங்களுடன் பகிர்ந்து கொள்ள அ முதல் ஃ!!



ன்பு - ஆக்சிஜன்

ரோக்கியம் - மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என்றும் முழுமையாக நிலைத்திட ஆவல், பிராத்தணைகள்.

ன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.

கை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.

ழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை

ர்வம்பு - கால விரயம்

திர்பார்ப்பினை குறைத்து மாற்றத்தினை தவிர்க்கலாம்.

ங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து

ற்றுமை எப்பொழுதும் எவருடனும்.


ய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது.


ஒளடதம் : அழகிய‌ புன்னகை


ஷ‌பி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!

இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.



அயல் நாடு சென்று, இந்தியா நாட்டில் நீங்கள் இழந்தது என்ன? அங்கு அடைந்தது என்ன?



அடிக்கடி எனக்குள் கேட்டு விடை தெரிந்தும் தெரியாதது போல் பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.


இந்தக் கேள்விக்கான‌ விடையை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென‌ தோழி தமிழ் அரசியின் விண்ணப்பம். தமிழரசி, தீக்குள் விரல் வைத்து, மகா கவி பாரதியுடன் விவாதித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியதை போல என்னால் முடியாவிட்டாலும், முயற்சி செய்து இருக்கின்றேன், படித்து பாருங்களேன்.


பெற்றதையும், பெறாததையும் ஆராய்வதற்க்கு முன், நான் ஏன் அயல் நாடு வந்தேன் என சிறிது எண்ணிப்பார்க்கின்றேன், கல்லூரியில் பட்டப்படிப்பு, அதனிடையே ஒரு பட்டயப்படிப்பு, பட்டம் பெற்றவுடன், மேலும் படிப்பைத் தொடர்வதா, அல்லது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்க்குள் நுழைந்து விடுவோமா என ஒரு சிறிய மன‌ப் போராட்டம்.

இதற்க்கிடையே அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம், இப்படி எண்ண ஓட்டங்கள்.

சரி வேலைக்கு போக வேண்டியது தான், அப்ப்டியே மேற்க்கொண்டு படிப்பதானால் பிறகு படித்துக் கொள்வோம் என வேலை தேடும் படலம் தொடங்கியது.

அங்கும் இங்குமாய் சில மாதங்கள் ஓடியது, அடப்போப்பா, நீ எப்போ உள்ளூரில சம்பாதிச்சு, வாழ்க்கையில செட்டில் ஆகப்போறே, பேசாம வெளி நாட்டிற்க்கு முயற்சி பண்ணுப்பா அதான் உன்னோட எல்லா சொந்தங்களும் இருக்காங்கள்ள, இதுவே பெரும்பான்மையானவர்களின் அறிவுரை, ஆவல், வேண்டுகோள்.

சரி ஏற்பாடும் செய்தாகிவிட்டது, வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், எல்லோரைப்போல நானும் தீர்மானித்துக் கொன்டேன். நினைக்கும் போது நல்லாத்தான் இருக்கு.

சென்னையிலிருந்து புறப்பட்ட‌ விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.

விமானம் தரையிறங்கி முதன்முறையாக ஒரு அயல் நாட்டிற்க்குள் நுழைகிறேன், ஆயிரம் கணவுகளுடன்.

விமான நிலையத்தில் பல முகங்கள், இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரே அதிகமாக‌ காணப்படனர், அதிலும் என்னைவிட வயதில் பலமடங்கு மூத்தவர்களே அதிகம். வாடிய முகத்துடன் பலர், என்னைப்போன்று எதையோ தேடும் பரபரப்புடன் சில இளைஞர்கள், தங்களது மனைவி, குழந்தைகளுடன் சிறிது மகிழ்ச்சியுடன் சிலர் அங்கும் இங்கும். இதில் நான் யாராக எதிர் காலத்தில் இருக்கப் போகிறேன், என்னுள் பல சிந்தனைகள்.

அங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.



நாட்கள் உருண்டோடியது, ஒரு நாள் என் நெருங்கிய நண்பனிடமிருந்து அழைப்பு, அவனுக்கு திருமணமாம், எப்படியாவது வந்து கலந்துக்கொள் என பிடவாதமான வேண்டுகோள், ஆம், சோழனிலும், பல்லவனிலும் ஒன்றாய் சுற்றித்திரிந்து, வீட்டிலிருக்கும் நேரம் போக இது போன்ற நட்புக்களுடேனேயே கழித்த நாட்கள் மறக்க முடியுமா என்ன? வாழ்வின் முக்கியமான நிகழ்வு, மாப்பிள்ளைத் தோழனாய் நான் இருந்திருக்க வேண்டும், ஆனால் எனை அறியாமல் அவனது திருமணமும் நடந்தது, அவனும் சில மாதங்களில் அமேரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பயணம், ஆக அவனை கல்லூரி நாட்களில் சந்தித்தது.



அடுத்த‌ சில மாதங்களில் என்னை அருமையோடு, அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்த தாத்தா, பாட்டி இவ்வுலகத்திலிருந்து பிரிந்தது, அவர்கள் எனக்காக செய்த பிராத்தணைகள், தியாகங்கள் இவையெல்லாம் இனி கிடைக்குமா? பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.


இதனை அடுத்து பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது.


தமிழரசி கொடுத்த தலைப்பினை, எனது மனைவியிடத்திலும் காட்டினேன், அவர்களும் தன் பங்குக்கு கூறிய பல விடயங்களில், சில:


குழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.


மருத்துவ வசதிகள், நாம் நாட்டைப்போல திறமையான மருத்துவ வசதியை வேறு எங்கும் பெற முடியுமா?


ஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!!



இந்த இழ‌ப்புக‌ளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற‌ வேறொன்றை இழ‌ந்து தானே ஆக‌ வேண்டும்!!‌ இது தாங்க நிஜம்.. Reality!!


இன்னும் வளர்க்க விரும்பவில்லை, ஏற்கனவே தாமதம் என தமிழ் டீச்சர் கோபத்தில் இருக்காங்க, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இது போதுமென்று நினைக்கின்றேன்.

மிக்க நன்றி அரசி!!

நன்றிகள் நட்புக்களே!!

Posted on 12:45 PM

மற்றுமொரு மாயை

Filed Under () By SUFFIX at 12:45 PM



எண்ணங்களில் க‌ண்டு ம‌கிழ்ந்து
தேன்மொழிக‌ள் உண்டு களித்து
தேடுத‌லில் தீண்டி உணர்ந்து
காடு, க‌ட‌ல், ம‌லை க‌ட‌ந்து
காற்றில் வ‌ரும் அவ‌ள் சுவாச‌ம் நுக‌ர்ந்து
ர‌க‌சியமாய் அக‌ம‌கிழ்ந்து

சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து
அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!

இதோ,
மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
'அவள்' செய்த‌‌
‌ம‌ற்றுமொரு மாயையிது!!

சமீபத்தில் என்னுடைய வலைப்பதிவிற்க்கு புதிய வார்ப்புரு (Template) மாற்றலாம் என‌, பச்சை நிறத்திலேயே வேறு ஏதாவது நல்ல வடிவமைப்பு கிடைக்குமா என தேடியபோது, கிடைத்தது தான் தற்போது நீங்கள் காணும் இந்த புதிய தோற்றம்.(பிடிச்சுருக்கா?)

இயற்க்கையென்றாலே பசுமையல்லவா? ஏன் நமது வலைப்பூவே நாம் நினைத்த நல்ல‌ கருத்தை நமது நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, என சிந்தித்ததே இந்த பசுமை நிறமும், பக்கத்தில் காணும் சிறு படங்களும், குறுந்தகவல்களும். (ரொம்பவே யோசிக்கிறாங்கய்யா).

நீங்கள் படிக்கப் போகும் இந்த ஆக்கம், எங்களது நிறுவனத்தின் Paperless Office Campaignக்காக சென்ற வருடம் எழுதியது, இயன்ற‌ வரை மொழிபெயர்த்து வழங்குகிறேன்.‍

இது என்ன ஒரு தாள் தானேன்னு நினைத்து நாம இஷ்டத்திற்க்கு அடித்தும், கிழித்தும் தள்ளுகிறோம், ஆனால் இதன் பின்னனியில் நமது நிறுவனத்திற்க்கு விழைவிக்கும் நஷடங்களையோ, நமது சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதகங்களையோ நாம் சிந்திப்பதேயில்லை.

சிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் ச‌ர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள். இதனால் எத்தனை நஷ்டம், என்ன நம்ம வீட்டு பணமா போகப்போகிறது என‌ அவர்களுக்கு நினைப்பு!! (இனிமேலாவது திருந்துங்களேன்...)

சமீபத்தில் அமேரிக்காவில் எடுத்த ஆய்வினில் கண்ட சில புள்ளி விவரங்கள்:
  • ஒரு காகித்தின் விலை ஒரு ரூபாய் என்றால் அதனை அச்சிடுதல், நகல் எடுத்தல், வினியோகித்தல், பத்திரப்படுத்துதல் போன்ற சங்கிலித்தொடர்பான‌ செலவுகளே முப்பது மடங்கு ஆகிறதாம்.

  • சராசரியாக ஒரு ஊழியர் ஒரு வருடத்திற்க்கு பத்தாயிரம் காகிதங்கள் உபயோக்கின்றாராம்.
  • அமேரிக்காவில் மட்டும் வருடத்திற்க்கு 3.7 மில்லியன் டன் காகிதங்கள் அலுவலகங்களில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது.
  • காகித் தொழிற்ச்சாலைகளுக்கு மட்டும் 12 சதவிகதம் எரிபொருள் செல‌வு செய்யப்படுகிறதாம்.
  • ஒரு காகிதம் தயாரிக்க ஒரு குவளை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.
  • சிட்டி குரூப் நிறுவனம், இனி பிரின்ட் அல்லது நகல் எடுப்பவர்கள், தாளின் இரண்டு பக்கங்களிலுமே அச்சிட வேண்டும் என்று ஒரு சுற்றரிக்கை விட்டதாம், இந்த ஒரு சிறு முயற்சியால் அவர்கள் சேமித்த தொகை ஆண்டிற்க்கு ஏழு லட்சம் டாலர்கள்!!

அலுவலகங்களில் காகிதங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாதென்றாலும், இயன்ற வரை குறைவாக பயன்படுத்த முயற்சிப்போமே!!


அனைவருக்கும் தெரிந்தவை தான் இந்த குறிப்புகள், சற்று நினைவூட்டுவதற்க்காக்:

  • எப்பொழுதும் தாளின் இரண்டு பக்கங்களிலும் (double sided) பிரின்ட் செய்யுங்கள்.
  • பெரும்பாலும் மின்னஞ்சல்கள் பிரின்ட் எடுக்க வேண்டிய அவசிய்ம் இருக்காது, அப்படியே வேண்டுமென்றால் தேவையான பகுதியை மட்டும் எடுக்கலாம்.
  • பழைய பிரின்ட் எடுத்து, தேவையில்லாத ஆவனங்களை, வேறு பல உபயோகத்திற்க்காக் பயன்படுத்தலாம் (கிறுக்குவது, நோட்ஸ் எழுதுவது, கவிதை எழுத..?)
  • பிரின்ட் எடுப்பதற்க்கு முன், மானிட்டேரிலேயே லேஅவுட், மற்றும் ஃபார்மேட்டுகளை (Print preview) சரி பார்த்து பின்னர் பிரின்ட் எடுக்கலாம்.
  • எழுத்துக்களின் அளவை (Font size) குறைத்து, பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • முடிந்தால் ஒவ்வொருவரும் Electronic Filing System வைத்துக் கொளவது நல்லது. ஏதாவது ஆவணம் தேவைப்பட்டால் உடனே தேடி எடுத்து, மின்னஞ்சல் மூலம் அனுப்பவதற்க்கும் இலகுவாக இருக்கும்.

"THINK BEFORE YOU INK"


இந்த டைட்டுல பார்த்துட்டு இது என்ன‌மோ மென்ஹட்ட்ன் மொக்காசினோ ரெஸ்ட்டாரன்ட்டோ, இல்லாட்டி புர்ஜ் துபாய் முப்பதாவது மாடியில உள்ள ஹோட்டல் மெனுவோன்னு திகச்சு நிக்காதிங்க. இது உங்க வீட்டு அம்மனீஸ அசத்தி நீங்களும் சமையல்ல கில்லி தான்னு சொல்ல வைக்கப் போற "கிரி..கிரி..கிரிஸ்ப்பி உங்கள் சாய்ஸ்" ஸ்டைல்ல ஒரு ஸ்னாக்ஸ்.
யப்பா ஷஃபி இந்த சமாசாரமெல்லாம் நமக்கு தேவையில்லை, எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது, ஆனா அதுல பாருங்க அவுக அப்படித்தான் சொல்லுவாக, நீங்க கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, அவுக போட்ட கோட்டை தாண்டி, கிச்சனுக்குள்ள குதிச்சு பட்டைய கெளப்புனம், அதுக்கு அப்புறம் அதோட குணம் தெரியும், டீடெய்லா அப்பால பேசிக்கலாம்.
இப்போ நான் சொல்லப்போற இந்த அயிட்டத்திற்க்கு நீங்க வேட்டிய வரிஞ்சு கட்டி, வேர்த்துக் கொட்ட வேண்டிய அவசியம் இல்லைங்க, என்ன சந்தோஷமா?
இப்பவே சில அம்மனீஸ் இந்த இன்ட்ரோவெ பார்த்து பயந்து பம்மி இருப்பாக, சரி நம்ம ப்ரொஸீட் பண்ணுவோம்.
முதல்ல தேவையான் பொருட்கள்:

பிரட் - 4 pcs
நெய் அல்லது வெண்ணெய் - 2 tsp (பிரட் மேல் தடவுவதற்க்கு)

பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்!!)

தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க.
அப்புறம் இது தொட்டுக்க சட்னி மாதிரி, கீழ்க்கண்டவைகளை மிக்ஸ் பன்னி ஒரு கோப்பையில் வச்சுக்குங்க, அப்படி இல்லைனாஜலீலா அக்கா இது மாதிரி சட்னி வகைகள் போட்டு இருப்பாங்க, அதுவும் ஒ.கே. தான்.
தயிர் - 3 tsp
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மயோனைஸ் - 1 tsp (தேவைப்பட்டால்)

இப்போ பிரட் கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ் ரெடி, தொட்டுக்க சட்னி ரெடி. தங்கமணி வழக்கம்போல் சீரியலில் மூழ்கி இருப்பாக, ஒரு சவுன்டு கொடுங்க, அங்கே இருந்து டெசிபெல் கூடுதலா சவுன்டு வந்தா, நீங்களே தட்டையே கை நடுங்காம அவுக இருக்கிற இடத்துக்கே போய் பரிமாறி உலகக் கோப்பையை தட்டிச்செல்லலாம், இல்லைனா வேற மாதிரி கோப்பை பறந்து வர வாய்ப்பும் இருக்கு, பத்திரமா பார்த்துக்கோங்க.

சவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா!!

தாயிஃப், நாங்கள் இருக்கும் ஜெத்தாவிலிருந்து 80 கி.மி. தூரத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800 மீ உயரம். நமதூர் ஊட்டி போன்று குளிராக இல்லயென்றாலும், அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம். கடந்த‌ வெள்ளிக்கிழமை சிறிய ஒரு பிக்னிக் சென்று வந்தோம். நிறைய பார்க்க வேண்டியவைகள் இருந்தாலும், நேரம் இன்மை காரணமாக கேபிள் காரில் மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

தரை மட்டத்திலிருந்து அழகிய சாலை வசதி மலையைச் சுற்றி வடிவமைத்து இருக்கின்றனர், மிகவும் பாதுகாப்புடன் அமைத்திருப்பது பாராட்டுக்குறியது. அதன் அழகிலும், நேர்த்தியிலும் எங்களைப் போன்ற அயல் நாட்டினர்களின் திறமையும், உழைப்பும் நூறு சதிவிகிதம் கொட்டி கிடக்கின்றதென்பது மறுக்க முடியாது உண்மை.

கேபிள் காரிலிருந்து கிளிக்கியவைகளில் சில, நமது நண்பர்களுக்காக: