|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label கண்டதும் கேட்டதும். Show all posts
Showing posts with label கண்டதும் கேட்டதும். Show all posts


இந்தியப் பிரதமர் சவூதி வருகை

சில தினங்களுக்கு முன் நமது இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சவூதி அரேபிய தலை நகர் ரியாத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருந்தார், முப்பது வருடங்களுக்கு முன்னர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ச்வூதி அரேபிய பயணத்திற்கு பின் தற்பொழுது வருகை தரும் நமது பிரதமரை சவூதி மன்னரும், அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் வெகு விமர்சையாக வரவேற்றனர். நான் ஜித்தாவில் இருந்தாலும் மூன்று நாட்களும் இங்குள்ள் நாளேடுகளில் அவரது பயணம் குறித்து விரிவான செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.

கல்வி, பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதினோறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் அலுவலகம் இந்தியாவில் தொடங்குவது, இங்குள்ள அரசு பள்ளிகளுக்கு டாடா பேருந்துகள் வாங்குவது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பத்திரிக்கை துறை செயல்பாடுகள், கணினித்துறையில் கூடுதல் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இங்குள்ள் பல்கலை கழகத்துடன் இந்தியப் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டன். வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

நில நடுக்கம் ஹைத்தி/சிலி:

சென்ற மாதம் ஹைத்தியிலும் அதனையடுத்து சிலியிலும் பயங்கர நில நடுக்கம், சிலியில் (8.8) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, இருந்தாலும் அங்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர், ஆனால் சிலியில் ஆயிரத்திற்கும் குறைவானோரே இறந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? பொருளாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.

சிலியின் பெரும்பாலான கட்டிடங்கள் நில நடுக்கத்தை தாங்கவும், இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு தரப்பட்டது. ஆனால் ஹைத்தியில் அவர்கள் இடிபாடுகளிக்கிடையே சிக்கி, கான்க்ரீட் கற்கள் மேலே விழும்போது, பாதுகாப்பாக அங்கிருந்து ஓடவோ, தற்காத்துக் கொள்ளவோ அவர்களுக்கு பயிற்சியளிக்கப் படவில்லை, அச்சத்தால் அங்கெங்கும் சிதறி ஓடி மரித்தவர்களே ஏராளம்.

Money is not everything, but it is something.

டிப்ஸ்:

மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா, இதோ சில குறிப்புகள்:
1. குறைந்தது ஆறு மணி நேரம் உறக்கம்.
2. உணவில் கட்டுப்பாடு
3. தினமும் அரைமணி நேரமாவது வேக நடை பயிற்சி (brisk walking)





சுழலும் வீடு

இது ஒரு புது மாதிரியான வீடு, ஆஸ்திரேலியாவில், வின்காம், பகுதியில் இந்த சுழலும் வீடு புதுசா கட்டியிருக்காங்க. சூரியன் எந்த திசையில போகுதோ, அந்த ப்க்கம் கூடுதலா வெளிச்சம் கிடைக்கிறதுக்காக இப்ப்டி வடிவமைச்சு இருக்காங்க, பல லட்சம் டாலர்கள் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்காங்க, இதுல குடியிருக்கிற ஜோடி (பிங்க்கி & பாங்க்கின்னு வச்சுக்கலாம்), ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்காம். நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். ஆனா இந்த தெருவுக்கு வருகிற போஸ்ட்மேன், பால் கொண்டு வருகிறவங்களுக்கு வாசல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கிறது குழப்பமா இருக்கும். (Reference : www.greendiary.com)


சிக்னல் சிக்கல்

எங்க அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது ஒரு சிக்னல் இருக்கு, சில மாதங்களுக்கு முன் அதுல கவுன்ட்டிங் முறை, அதாவது சிவப்பு நிறம் வந்தா 90 வினாடிகளும், பச்சை நிறம் மாறும் போது 30 வினாடிகளும் இருக்கும், சிறிது நாட்களாக பச்சை நிறம் மாறினால் அது 01 லேயே நிக்கும், நாம பாட்டுக்கு இப்ப மாறுமோ, அப்போ மாறுமோன்னு வண்டிய உருட்டிக்கொண்டு போகணும். ஆனா நேற்றிலிருந்து பாருங்க சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து எரிவதால் இன்னும் பிரச்ணை கூடுதலா ஆயிடுடச்சு. ஒரே டென்ஜன்...


வருடம் 2010

இன்னும் இரண்டு வாரத்தில் புது வருடம் 2010 பிறக்கபோகுது, அதை இரண்டாயிரத்து பத்துன்னு (Two thousand and ten))சொல்வதா இருபது (Twenty Ten))பத்துன்னு சொல்வதான்னு ஒரு சர்ச்சை பல நாடுகளில் கிளம்பி இருக்கு, யாருப்பா அது, கொண்டு வாங்க சொம்பையும், ஜமுக்காலத்தையும், கூட்டுங்கடா பஞ்சாயத்தை, நீங்க எப்புடி வேணும்னாலும் சொல்லுங்க ஆனா அமைதியா அடிச்சுக்காம எங்கள வாழ விட்டா சரி.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மழையால் ஏற்பட்ட வெள்ளம், அதனைத் தொடர்ந்து வானம் தினமும் 2012 படக்காட்சி போல மிரட்டிக் கொண்டு இருந்தது. இன்றைக்கு தான் வானம் தெளிவாக இருந்தது. இந்தப் படங்கள் எங்கள் அலுவலகத்தின் பத்தாவது மாடியிலிருந்து எடுத்தது.

வானம் 10.12.2009


வானம் 08.12.2009